- பிரிட்டனை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியாவானது, 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- 2019ல் பிரிட்டன் பின்னடைவை சந்தித்த போதும், அந்நாடு எடுத்த நடவடிக்கை காரணமாக மீண்டும் 5வது இடத்திற்கு வந்தது. தற்போது, நிலவும் சூழல் காரணமாக 2024ம் ஆண்டில் இந்தியா மீண்டும் 5வது இடத்திற்கு வரும்.
- ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தான் இந்த ஆண்டு பிரிட்டன் 5வது பெரிய நாடாக மாறியது. 2021ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமும் 2022ல் 7 சதவீதமும் அதிகரிக்கும்.
- இந்த வளர்ச்சி விகிதம் மூலம், இந்தியாவானது, 2024 ல் பிரிட்டனையும், 2027 ல் ஜெர்மனியையும், 2030 ல் ஜப்பானை முந்தி 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும்.
- 2028 ம் ஆண்டில் சீனாவானது, அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும். கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா முதலிடத்திற்கு வரும்.
- டாலர் அடிப்படையில் 2030 வரை ஜப்பான் 3வது பெரிய பொருளாதார நாடாகவும், ஜெர்மனி 5வது பெரிய பொருளாதார நாடாகவும் இருக்கும்.
CEPR ECONOMIC SURVEY 2020 / பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) வெளியிட்ட அறிக்கை
December 27, 2020
0
Tags