Type Here to Get Search Results !

TNPSC 6th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'ஆகாஷ்' நிறுவன இயக்குனருக்கு தொழில்முனைவோர் விருது

  • பி.எச்.டி., சேம்பர் ஆபர் காமர்ஸ் நிறுவனம், 1977 முதல், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர்களுக்கு, அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் புரிந்துள்ள சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
  • இந்தாண்டிற்கான விருது வழங்கும், தேர்வு குழுவின் தலைவராக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஆர்.சி.லஹோதி இருந்தார்.
  • அவருடன், கனரா வங்கியின், முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ராஜிவ் கே துபே, மூத்த தொழிலதிபர், டாக்டர் அருணா அபே ஓஸ்வால்ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
  • இக்குழுவின் பரிந்துரைப்படி, போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார் செய்வதில், தேசிய அளவில் முன்னணியில் உள்ள, ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனரான, ஜே.சி.சவுத்ரிக்கு, 'புகழ்பெற்ற தொழில்முனைவோர் விருது - -2020' வழங்கப்பட்டது.
  • இந்த விருதை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், முன்னாள் ராணுவ ஜெனரலுமான, வி.கே.சிங் வழங்கினார்.
கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வரலாற்றில் முதன் முறையாக, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒருவர், கோவிலின் பூஜாரியாக தேர்வு 
  • கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில், பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. 
  • கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள், இந்த போர்டின் நிர்வாகத்தில் உள்ளன. இந்நிலையில், இந்த போர்டு வரலாற்றில் முதன் முறையாக, பகுதி நேர அடிப்படையில் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த, 18 பேர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், கோவில்களின் பூஜாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
  • தேவசம் போர்டு சார்பில் இதுவரை, 310 பகுதி நேர பூஜாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான தேர்வுகள் நடந்தபோது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளில் இருந்து தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவில்லை.
  • இதனால் அவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிட்டு, புதிய தரவரிசை பட்டியில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதிலும், பழங்குடியினருக்கான நான்கு இடங்களுக்கு, ஒருவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். 

இந்தியா இத்தாலி இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் பேராசிரியர் கியுசெப் கோன்டே ஆகியோருக்கிடையே இருதரப்பு மெய்நிகர் மாநாடு 2020 நவம்பர் ஆறு அன்று நடைபெற்றது.
  • பேராசிரியர் கியுசெப் கோன்டே 2018-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த மோடி, இந்தியா- இத்தாலிக்கு இடையேயான உறவு சமீபகாலங்களில் வேகமாக வலுவடைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். நிலைமை சீரானவுடன் இத்தாலிக்கு வருகை புரியுமாறு பிரதமர் மோடிக்கு பிரதமர் பேராசிரியர் கோன்டே அழைப்பு விடுத்தார்.
  • இருதரப்பு உறவுகளுக்கான கட்டமைப்பை விரிவாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு இரு தலைவர்களுக்கும் வழங்கியது.
  • கோவிட்-19 உட்பட பொதுவான உலக சவால்களை எதிர்த்துப் போராடுவதில் வலுவான ஒத்துழைப்புக்கான உறுதியை தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.
  • அரசியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விரிவான விஷயங்களை தலைவர்கள் விவாதித்தனர். குறிப்பாக ஜி-20 உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச தளங்களில் நெருங்கி பணிபுரிவது என இருதரப்பும் ஒத்துக்கொண்டன.
  • டிசம்பர் 2021-இல் இத்தாலியும், 2022-இல் இந்தியாவும் ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். டிசம்பர் 2020-இல் இருந்து இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து ஜி-20 நிர்வாக அமைப்பில் இருப்பார்கள். 
  • ஒப்புதல் நடவடிக்கை முடிந்தவுடன் சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இணைய இத்தாலி முடிவெடுத்திருப்பதை இந்தியா வரவேற்றது.
  • இந்த மாநாட்டில் இருதரப்பின் உறவை மேம்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துதல், தொழில்நுட்பப் அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குவஹாத்தி உயர்நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம் குடியரசுத் தலைவர் உத்தரவு

  • இந்திய அரசியலமைப்பு சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைக் பயன்படுத்தி, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான, நீதிபதி சஞ்சய் குமார் மேதி, நீதிபதி நானி தாகியா மற்றும் நீதிபதி மனிஷ் சவுத்ரி ஆகியோரை கவுகாத்தி நீதிமன்றத்தின் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
  • இந்த மூன்று நீதிபதிகளும் பதவியேற்றுக் கொள்ளும் நாளில் இருந்து இவர்களது நியமனம் அமலுக்கு வரும். இது தொடர்பான அறிவிக்கைகளை மத்திய நீதி மற்றும் சட்டத்துறை 2020 நவம்பர் 5 அன்று வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel