Type Here to Get Search Results !

TNPSC 22nd NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

3 பல்கலை, 18 கல்லூரிகளுடன் இன்குபேஷன் மையம் ஒப்பந்தம்

  • திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ வளாகத்தில், ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கான அடல் இன்கு பேஷன் மையம் இயங்குகிறது. இம்மையம், தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி, புதுமையான ஆடை ரகங்களை உருவாக்கிவருகிறது.
  • மாணவர்களை, எதிர்கால தொழில்முனைவோராகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் மாற்றும் வகையில், பல்கலை கழகங்களும், கல்லுாரிகளும், இன்குபேஷன் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன.
  • இதுவரை, அழகப்பா, பாரதியார், பெரியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 16 கல்லுாரிகள், திருப்பூர் இன்குபேஷன் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 
  • அந்தவகையில் தற்போது, சென்னையில் உள்ள இரண்டு கல்லுாரிகள், வரும் 25ம் தேதி, இன்குபேஷன் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.

பசுக்களை பாதுகாக்க மபி.யில் கோமாதா வரி: முதல்வர் சவுகான் அறிவிப்பு

  • மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. பசுக்களின் பாதுகாப்புக்காக சமீபத்தில் இவர், தனி அமைச்சரவை குழுவை அமைத்தார். 
  • இதில், 6 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம், சவுகான் தலைமையில் நடந்தது. பசுக்களின் பாதுகாப்புக்காக 'கோமாதா வரி'யை வசூலிக்க, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 
ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் என்ற திட்டத்தை உத்தர பிரதேசத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி
  • உத்தர பிரதேசத்தின் விந்தியா பிராந்தியத்தில் உள்ள சோன்பத்ரா மற்றும் மிர்சாபூருக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 
  • இப்பகுதியில் பல ஆறுகள் இருந்தபோதிலும் குடிநீர் பிரச்னை காணப்பட்டது. இந்த அரசாங்கம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது. 
  • அதன் விளைவாக இன்று ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுயச்சார்பு கொண்ட கிராமங்கள், சுயச்சார்பு இந்தியாவுக்கு வலு சேர்க்கின்றன.
  • காணொளி வாயிலாக நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றனர். ரூ.5,555.38 கோடி மதிப்பிலான இத்திட்டம் இரண்டு மாவட்டங்களில் உள்ள 41 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி
  • இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. சைட்மெக்ஸ்- 20 (SITEMEX-20) என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
  • இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் கப்பலான கமோர்டா மற்றும் ஏவுகணை தாங்கிக் கப்பலான கர்முக் ஆகியவை இந்த பயிற்சியில் பங்கு பெறுகின்றன.
  • முதலாவது சைட்மெக்ஸ் பயிற்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர்ட் பிளேயரில் நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், பொதுவான புரிதலை வளர்க்கவும், கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தேவையான சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றவும் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த வருடப் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை தலைமை ஏற்று நடத்துகிறது.
  • கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொடர்பில்லாத வகையில் கடற்பகுதியில் மட்டுமே இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel