- ஆசிய கண்டத்தில் இந்தியாவில்தான் அதிக லஞ்ச விகிதம்நிலவுகிறது. லஞ்சம் கொடுத்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர்லஞ்சம் தருமாறு வற்புறுத்தப்பட்டதாகவும், 32 சதவீதம் பேர் சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
- அதிக லஞ்ச விகிதம் 39 சதவீதமாகவும், பொது சேவைகளைப் பெற தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தும் நபர்களின் விகிதம் 46 சதவீதமாகவும் இந்தியாவில் உள்ளது.
- பொது சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் தரும் விஷயம் இந்தியாவை அதிக அளவு பாதிக்கிறது. தெளிவற்ற ஒழுங்குமுறை கட்டமைப்புகள், குடிமக்கள் தங்களது அடிப்படை சேவைகளைப் பெறுவதற்கு மாற்று தீர்வுகளைத் தேடும்போது லஞ்சம் தருமாறு கட்டாயப்படுத்தப்படுகிறது.
- லஞ்சத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள், பொது சேவைகளை வழங்குவதில் தங்களது நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டும். மேலும் லஞ்சத்தைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- அதுமட்டுமல்லாமல் குடிமக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளை எளிதில் பெறுவதற்கு சுமூகமான நட்புச் சூழலை ஏற்படுத்துதல் வேண்டும். அதாவது ஆன்-லைன் சேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
- அதே நேரத்தில் ஊழல் தொடர்பாக புகார் அளித்தால் தங்களுக்குத் தேவையான நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக, கம்போடியா 2-வது அதிகபட்ச லஞ்ச விகிதத்தை 37 சதவீதமாகக் கொண்டுள்ளது.
- அதைத்தொடர்ந்து இந்தோனேசியாவில்லஞ்சம் 30 சதவீதமாக உள்ளது. குறைந்தபட்சமாக மாலத்தீவு, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒட்டுமொத்த லஞ்ச விகிதம் 2 சதவீதமாக உள்ளது.
ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடு தொடர்பான அறிக்கை / REPORT ON CORRUPTION IN ASIAN COUNTRY
November 27, 2020
0
Tags