ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தல் புதிய சட்டத் திருத்தம்
- ஆலைகள் விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான நில சீா்திருத்த சட்டத்தில் உரிய திருத்தங்களையும் அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திருத்தம் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த திருத்தத்தின் படி, ஆலைகள் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்காக 120 ஏக்கா் வரை புன்செய் நிலங்களையும், 60 ஏக்கா் வரை நன்செய் நிலங்களையும் அரசின் முன் அனுமதி ஏதும் இல்லாமல் தனியாா்களிடம் இருந்து ஆலை நிா்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
- இந்தப் புதிய உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தொழில் துறை உயரதிகாரிகள், தொழில் ஆலைகளைத் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் நிலங்கள் கிடைப்பது மிகப்பெரிய சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் அரசின் நடவடிக்கையால் அதற்கான தடைகளும், சிரமங்களும் விலகி உள்ளன.
- தொழில் ஆலைகள் விரிவாக்கத்துக்கு 100 ஏக்கரைத் தாண்டி நிலங்களை வாங்கும் போது அதற்கு அரசின் முன் அனுமதியைப் பெறுவது போன்ற பல்வேறு நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
அக்டோபர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி., வசூல்
- பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்து வருவதால், அக்., மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.05 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
- கடந்த, எட்டு மாதங்களில் முதல் முறையாக, 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
- கடந்த அக்டோபர் மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., வசூல், 1.05 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு, அக்.,ல், 95 ஆயிரத்து, 379 கோடி ரூபாய் வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- இந்தாண்டு, பிப்.,ல் 1.05 லட்சம் கோடி ரூபாயாக, ஜி.எஸ்.டி., வசூல் இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் பிறகு, வரி வசூல் குறைந்தது.
கே.பி.அன்பழகனுக்கு வேளாண் துறை கூடுதலாக ஒதுக்கீடு
- தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
- தொடர்ந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இறந்தார். இந்நிலையில் துரைக்கண்ணு பதவி வகித்து வந்த வேளாண்துறையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி, தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்தார்.
- அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றார். இதையடுத்து கே.பி.அன்பழகனுக்கு உயர் கல்விதுறையுடன், வேளாண் துறை கூடுலாக அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியமனம்
- நியூசிலாந்தில் அண்மையில்
நடைபெற்ற
நாடாளுமன்ற
தேர்தலில்
பிரதமர்
ஜெசிந்தா
ஆர்டர்ன்
தலைமையிலான
நியூசிலாந்து
தொழிலாளர்
கட்சி
அமோக
வெற்றி
பெற்றது.
இந்நிலையில்,
தனது
அமைச்சரவையில்
5 பேரை
புதிதாக
நியமித்து
பிரதமர்
திங்கள்கிழமை
அறிவிப்பு
வெளியிட்டார்.
- அவர்களில்
பிரியங்கா
ராதாகிருஷ்ணனும் ஒருவர்.
பன்முகத்தன்மை,
உள்ளடக்கம்
மற்றும்
இன
சமூகங்களுக்கான அமைச்சராக
அவர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும்,
சமூக
மற்றும்
தன்னார்வ
துறை
அமைச்சராகவும்,
சமூக
மேம்பாடு
மற்றும்
வேலைவாய்ப்புத் துறை
இணை
அமைச்சராகவும்
அவர்
பணியாற்றுவார்.
- கேரளத்தைப்
பூர்விகமாகக்
கொண்ட
பிரியங்கா
ராதாகிருஷ்ணன்
(41) சென்னையில்
பிறந்தவர்.
தனது
பள்ளிக்
கல்வியை
சிங்கப்பூரில்
பயின்றார்.
- பின்னர்,
உயர்
கல்விக்காக
நியூசிலாந்து
சென்றார்.
குடும்ப
வன்முறையால்
பாதிக்கப்பட்ட
பெண்கள்,
சுரண்டப்படும்
புலம்பெயர்ந்த
தொழிலாளர்கள்
போன்றவர்களின்
நலனுக்காகப்
பணியாற்றி
வந்தார்.
- 2017-ஆம் ஆண்டு நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு இன சமூகங்களுக்கான அமைச்சரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார். பிரியங்கா ராதாகிருஷ்ணன் தன் கணவருடன் ஆக்லாந்தில் வசித்து வருகிறார்.
மின்சார மோட்டாா் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அமல்
- தமிழகத்தில்
வாகனங்களால்
ஏற்படும்
காற்று
மாசுபாட்டைக்
குறைக்கும்
வகையில்,
தனியாா்
நிறுவனங்கள்
மின்சார
வாகனங்களை
அதிகளவு
பயன்படுத்துவதற்கு ஏதுவாக
நிலையான
வழிகாட்டு
நெறிமுறைகளைத்
தமிழக
அரசு
வகுத்துள்ளது.
- குறிப்பாக
கடந்த
ஆண்டு
முதல்வா்
வெளியிட்ட
மின்சார
வாகனக்
கொள்கையின்
மூலம்
ரூ.50
ஆயிரம்
கோடிக்கு
முதலீடுகளை
ஈா்க்கத்
திட்டமிடப்பட்டது. அந்தக் கொள்கையில்
மின்சார
வாகனங்களைத்
தயாரிக்கும்
தொழில்
நிறுவனங்களுக்கு பல்வேறு
சலுகைகள்
இடம்
பெற்றிருந்தன.
- அதே
நேரம்,
2030-ஆம்
ஆண்டுக்குள்
மின்சார
வாகனங்களின்
மொத்த
எண்ணிக்கை
9.8 கோடியாக
இருக்கும்
எனவும்
கணிக்கப்பட்டிருந்தது.
- இந்த
வாகனங்களை
வாங்கும்
வாடிக்கையாளா்களுக்கான சலுகைகள்
அறிவிக்கப்பட
வேண்டும்
என
கோரிக்கை
எழுந்தது.
இதையடுத்து
மின்சார
வாகனங்களுக்கு
100 சதவீத
வரி
விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
- கடந்த
2008-ஆம்
ஆண்டு
மாா்ச்சில்
வெளியிடப்பட்ட
அரசின்
உத்தரவில்,
மோட்டாா்
வாகனங்களுக்கு
ஒருமுறைக்கான
வரியாக
ரூ.750
வசூலிக்கப்பட்டு வந்தது.
மேலும்,
பொது
மக்கள்
தனிப்பட்ட
முறையில்
பயன்படுத்துவதற்கான புதிய
மின்சார
மோட்டாா்
வாகனங்களுக்கான ஒருமுறை
வரியானது
3 சதவீதமாக
விதிக்கப்பட்டது.
- மின்சாரத்தில்
இயங்கும்
புதிய
மோட்டாா்
வாகனங்களின்
பயன்பாட்டை
அதிகரிக்க
100 சதவீதம்
வரி
விலக்கு
அளிக்க
வேண்டுமென
போக்குவரத்து
ஆணையா்
சாா்பில்
அரசுக்கு
கடந்த
ஆண்டு
நவம்பா்
18ஆம்
தேதி
கடிதம்
எழுதப்பட்டது.
இதன்
அடிப்படையில்,
மின்சாரத்தில்
இயங்கும்
வாகனங்களுக்கு
100 சதவீதம்
வரி
விலக்கு
அளிக்கப்படுகிறது.
- இது,
வா்த்தக
ரீதியிலான
மற்றும்
வா்த்தக
ரீதியில்
அல்லாத
வாகனங்களுக்கும் பொருந்தும்.
இந்த
வரி
விலக்கு
முறை
உடனடியாக
அதாவது,
செவ்வாய்க்கிழமை (நவ.3) முதல் அமலுக்கு
வருகிறது.
இது
வரும்
2022-ஆம்
ஆண்டு
டிசம்பா்
31-ஆம்
தேதி
வரை
நடைமுறையில்
இருக்கும்
தமிழகம் உட்பட 15
மாநிலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த 2,200 கோடி நிதி ஒதுக்கீடு
- நகர்ப்புறங்களில் காற்றின்
தரத்தை
மேம்படுத்த
15வது
நிதி
கமிஷன்
மத்திய
அரசுக்கு
பல்வேறு
பரிந்துரைகளை
வழங்கியது.
- இப்பரிந்துரைகளின்படி, 10 லட்சத்துக்கு மேற்பட்ட
நகரங்களில்
காற்றின்
தரத்தை
மேம்படுத்த
தமிழகம்
உள்ளிட்ட
15 மாநிலங்களுக்கு மத்திய
அரசு
2,200 கோடி
ஒதுக்கீடு
செய்துள்ளதாக
மத்திய
நிதி
அமைச்சர்
நிர்மலா
சீதாராமன்
அறிவித்துள்ளார்.
- இதில்
தமிழகத்தில்
சென்னைக்கு
90.5 கோடியும்,
மதுரைக்கு
15.5 கோடியும்,
திருச்சிக்கு
10.5 கோடியும்
என
மொத்தம்
116.5 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்மாக மகாராஷ்ராடிராவுக்கு 396.5 கோடியும், உத்தரப்பிரதேசத்திற்கு 357 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
16 மாநிலங்களுக்கு 2ம் தவணையாக ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு
- ஜிஎஸ்டியை
அமல்படுத்தும்போது, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும்
வருவாய்
இழப்பை
ஈடுகட்டும்
வகையில்,
5 ஆண்டுகளுக்கு
இழப்பீடு
வழங்க
மத்திய
அரசு
ஒப்புக்கொண்டது.
- அதன்பிறகு
மாநில
அரசுகள்
தங்களுக்கு
உரிமையாக
கிடைக்க
வேண்டிய
இழப்பீட்டை
போராடி
பெற்றன.
கொரோனா
பரவலைக்
கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்,
மத்திய,
மாநில
அரசுகளின்
வரி
வருவாய்
கடுமையாக
பாதிக்கப்பட்டது.
- இதை
காரணம்
காட்டி,
மாநில
அரசுகளுக்கு
இழப்பீடு
வழங்க
முடியாது
என
மத்திய
அரசு
கைவிரித்து
விட்டது.
- மாறாக,
வருவாய்
இழப்பீடான
ரூ.2.35
லட்சம்
கோடி
இழப்பீடு
அல்லது
ஜிஎஸ்டியை
அமல்படுத்தியதால் ஏற்பட்ட
ரூ.97,000
கோடி
இழப்பீடு
பெற
விரும்பும்
மாநிலங்கள்,
ரிசர்வ்
வங்கி
மூலம்
அல்லது
பத்திர
வெளியீடு
மூலம்
கடன்
திரட்டிக்கொள்ள யோசனை
கூறியது.
இதற்கு
பல
மாநிலங்கள்
எதிர்ப்பு
தெரிவித்தன.
- இந்நிலையில்
சந்தையில்
இருந்து
ரூ.1.1
லட்சம்
கோடி
திரட்டி,
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி
இழப்பீடு
வழங்கப்படும்
என
மத்திய
அரசு
தெரிவித்திருந்தது.
- கடந்த
மாதம்
23ம்
தேதி
முதல்
தவணையாக
மத்திய
அரசு
கடன்
மூலம்
திரட்டிய
ரூ.6,000
கோடியை
ஆந்திரா,
அசாம்,
பீகார்,
கோவா,
குஜராத்,
அரியானா,
இமாச்சலப்
பிரதேசம்,
கர்நாடகா,
மத்தியப்
பிரதேசம்,
மேகாலயா,
ஒடிசா,
தமிழ்நாடு,
திரிபுரா,
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர்
ஆகியவற்றுக்கு
வழங்கி
வருகிறது.
- தற்போது
2வது
தவணையாக
16 மாநிலங்கள்
மற்றும்
3 யூனியன்
பிரதேசங்களுக்கு ரூ.6,000
கோடி
வழங்கப்படுவதாக மத்திய
அரசு
தெரிவித்துள்ளது.
மலபார் கடற்பயிற்சி ஒத்திகை 2020
- ஆண்டுதோறும்
பல்வேறு
நட்பு
நாடுகளின்
கடற்படை
கப்பல்கள்
ஒத்துழைப்புடன் இந்திய
கடற்படை
கூட்டு
போர்
பயிற்சியை
நடத்துவது
வழக்கம்.
- அந்த
வகையில்
இந்த
ஆண்டு
அமெரிக்கா,
ஜப்பான்,
ஆஸ்திரேலிய
கடற்படை
கப்பல்களுடன்
இந்தியா
கூட்டு
போர்
பயிற்சியை
தொடங்கியது.
- இந்தப்
பயிற்சிக்கு
மலபார்
கடற்பயிற்சி
ஒத்திகை
என
பெயரிடப்பட்டுள்ளது.
- வங்கக்
கடலில்
மலாக்கா
நீரிணை
அருகே
இந்தப்
பயிற்சி
அதிகாலை
தொடங்கியது.
இதைத்
தொடர்ந்து
அரபிக்
கடலிலும்
இதேபோன்ற
போர்
பயிற்சி
ஒத்திகையை
நடத்த
இந்த
4 நாடுகளும்
முடிவு
செய்துள்ளன.
- இந்திய
- பசிபிக்
பிராந்தியத்தில், அமைதியை பராமரித்து,
சுதந்திரமான
கப்பல்
போக்குவரத்துக்கு வழிவகை
செய்ய,
அமெரிக்கா,
இந்தியா,
ஆஸ்திரேலியா,
ஜப்பான்
ஆகியவை
இணைந்து,
'குவாட்'
என்ற
அமைப்பை
உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின்
சார்பில்
முதன்
முறையாக
கூட்டுபோர்
பயிற்சி
தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த
பயிற்சியின்போது இந்திய
கடற்படையைச்
சேர்ந்த
ஒரு
நீர்மூழ்கிக்
கப்பல்
உட்பட
5 கப்பல்கள்
பங்கேற்றன.
- அமெரிக்க
கடற்படையின்
ஏவுகணை
அழிப்பு
கப்பல்,
ஆஸ்திரேலியாவின் பல்லாரட்
பிரிகேட்
கப்பல்,
ஜப்பானின்
பிரம்மாண்ட
போர்க்கப்பல்
ஆகியவை
பங்கேற்றதாக
இந்திய
கடற்படை
வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல்
கட்ட
போர்
பயிற்சி
ஒத்திகை
நவம்பர்
6-ம்
தேதி
வரை
நடைபெறும்.
இதைத்
தொடர்ந்து
இந்திய,
அமெரிக்க
விமானம்
தாங்கி
போர்க்கப்பல்களும் பயிற்சியில்
ஈடுபடுத்தப்படும்.
- இரண்டாவது
கட்ட
பயிற்சி,
அரபிக்
கடலில்,
நவம்பர்
17 முதல்
20-ம்
தேதி
வரை
நடைபெறும்
என,
அறிவிக்கப்பட்டுள்ளது. மலபார் போர்
பயிற்சியில்,
இந்தாண்டு
முதல்
முறையாக
ஆஸ்திரேலிய
கடற்படையும்
இணைய
சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு, சட்டீஸ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடை மூலம் விநியோகம்
- நாட்டில்
ஊட்டச்சத்து
பாதுகாப்பை
உருவாக்கும்
நடவடிக்கையாக,
ரேஷன்
கடைகள்
வாயிலாக
செறிவூட்டப்பட்ட அரிசியை
வழங்கும்
மத்திய
அரசின்
பரிசோதனை
திட்டத்தை,
உணவு
மற்றும்
பொது
விநியோகத்துறை
செயல்படுத்துகிறது.
- 2019-20ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பரிசோதனைத் திட்டத்தை ரூ.174.6 கோடி செலவில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த
திட்டத்தை
தலா
ஒரு
மாவட்டத்தில்
அமல்படுத்த
15 மாநிலங்கள்
தேர்வு
செய்யப்பட்டுள்ளன.
- ஆந்திர
பிரதேசம்,
குஜராத்,
மகாராஷ்டிரா,
தமிழ்நாடு,
சட்டீஸ்கர்
ஆகிய
மாநிலங்களில்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலா
ஒரு
மாவட்டத்தில்
செறிவூட்டப்பட்ட அரிசி
விநியோகிக்கும் திட்டம்
ஏற்கனவே
தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்
- குடிமைப்
பொருள்
கடத்தல்
தடுப்புப்
பிரிவு
டிஐஜியாக
இருந்த
எம்.எஸ். ஜாஃபர் சேட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- இதுவரை
டாக்டர்
சி.
சைலேந்திர
பாபுவிடம்
கூடுதல்
பொறுப்பாக
இருந்த
தீயணைப்புத்
துறை
டிஜிபி
பதவி
தற்போது
ஜாபர்
சேட்டுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
- ஜாபர்
சேட்
இதுவரை
வகித்து
வந்த
குடிமைப்
பொருள்
கடத்தல்
தடுப்புப்
பிரிவு
டிஜிபி
பதவியை,
இனி
சென்னை
ரயில்வே
துறை
டிஜிபியாக
இருக்கும்
சைலேந்திர
பாபு
கூடுதலாக
கவனிப்பார்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம், மகாராஷ்டிரா வரிசையில் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது கேரள அரசு
- மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) டெல்லி சிறப்பு காவல் நிறுவன (டிஎஸ்பிஇ) சட்டத்தின் கீழ் இயங்குகிறது. எந்த ஒரு மாநிலத்திலும் விசாரணை நடத்துவதற்கு அந்த மாநில அரசின் பொதுவான ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதல் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது வழக்கம்.
- இந்நிலையில், கடந்த 2018-ல்சிபிஐ அமைப்புக்கான பொதுவான ஒப்புதலை மேற்கு வங்கஅரசு திரும்பப் பெற்றது. எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்காக சிபிஐ அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது.
- இதையடுத்து, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் அரசுகளும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றன.
- இதுபோல, மகாராஷ்டி ராவில் சமீபத்தில் எழுந்த தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்த நிலையில், அம்மாநில அரசும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது.
- இந்நிலையில், கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது.
- இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மோதல் நிலவி வந்த நிலையில், சிபிஐ அமைப்புக்கான அனுமதியை கேரள அரசு வாபஸ் பெற்றது.
- முன்னதாக, அமைச்சர வையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனிமேல், கேரளாவில் சிபிஐ வழக்கு பதிவு செய்ய மாநில அரசிடம் முன்அனுமதி பெற வேண்டியது அவசியம்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.294 கோடி திட்டப் பணிகள் தொடக்கம்: ரூ.324 கோடி பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்
- சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.162.43 கோடியில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தேனி ஊராட்சி ஒன்றியங்களில் அமைய உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
- கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.9.90 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், கீழமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.46 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ.9.62 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், நாகை மாவட்டத்தில் ரூ.42.46 கோடியில் கூடுதல் நீர் ஆதாரம் ஏற்படுத்துவதற்கான திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.91.13 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.324 கோடி குடிநீர் திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
- திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.46.32 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.6.60 கோடியில் கட்டப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்ட அலுவலக கட்டிடம், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ரூ.2 கோடியிலான நகராட்சி அலுவலக கட்டிடம்,
- தேனி அல்லிநகரம் நகராட்சியில் ரூ.3 கோடியிலான தூய்மை பணியாளர் குடியிருப்பு, ஆவடி மாநகராட்சியில் ரூ.197.20 கோடியிலான 4 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.255.12 கோடியிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
- சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ரூ.21.82 கோடியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் சீரமைக்கப்பட்ட 31 நீர்நிலைகள், சென்னை மாநகராட்சியால் சீரமைக்கப்பட்ட 117 சமுதாய கிணறுகள், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால்,
- கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சீரமைக்கப்பட்ட 174 சமுதாய கிணறுகள் என மொத்தம் 291 சமுதாய கிணறுகள், திரு.வி.க. நகர் ஸ்டிரஹான்ஸ் சாலையில் ரூ.13.49 கோடியிலான புதிய மண்டல அலுவலக கட்டிடம்,
- துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் ரூ.1.95 கோடியிலான நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம், தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் ரூ.69 லட்சத்திலான சிறப்பு காப்பக கட்டிடம், வில்லிவாக்கம் சிட்கோநகர் 4-வது பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் ரூ.1.08 கோடியிலான பூங்கா என மொத்தம்ரூ.39.03 கோடி மதிப்பிலான சென்னை மாநகராட்சி திட்டங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
- சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.27 லட்சத்தில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள், குப்பைகளை உறிஞ்சி அகற்றுவதற்கு ரூ.4.34 கோடியிலான 15 சிறிய வகை வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வர் வழங்கினார்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியது
- புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக
சா்வதேச
நாடுகள்
பாரீஸ்
நகரில்
மேற்கொண்ட
பருவநிலை
மாற்றத்திலிருந்து விலகும்
முடிவை
அமெரிக்க
அதிபா்
டொனால்ட்
டிரம்ப்
கடநத
2017-ஆம்
ஆண்டு
அறிவித்தாா்.
- அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக நினைக்கும் நாடுகள், அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, அமெரிக்காவின் காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளது.
- பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், புவியின் சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்ஷியசுக்குக்குக் கீழே வைத்திருப்பதற்கான சா்வதேச ஒப்பந்தம், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2016-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
- அதற்காக, தங்களது நாடுகளின் தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவை குறிப்பிட்ட அளவுக்குக் கட்டுப்படுத்த அந்த ஒப்பந்தத்தில் நாடுகள் ஒப்புக் கொண்டன. அந்த ஒப்பந்தத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டன.
பினாகா ஏவுகணை சோதனை வெற்றி
- ராணுவ ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு அமைப்பு பினாகா ஏவுகணையை உருவாக்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரை பகுதியில் உள்ள சண்டிப்பூர் ஏவுதளத்தில்இருந்து பரிசோதிக்கப்பட்டது.
- மொத்தம் ஆறு பினாகா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன. இதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன.
செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம்
- செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான
உத்தரவை
தலைமைச்
செயலாளா்
க.சண்முகம் புதன்கிழமை வெளியிட்டாா். ஹா் சகாய் மீனா: பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் - பயிற்சி (அயல் பணியை முடித்து மாநிலப் பணிக்குத் திரும்பியுள்ளாா்)
- ஜெ.இ. பத்மஜா: பெரம்பலூா் சாா் ஆட்சியா் (விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளாா்)
- டி.பாஸ்கர பாண்டியன்: செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை இயக்குநா், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன நிா்வாக இயக்குநா் (முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி)
- இ.சரவணவேல் ராஜா: முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி (தமிழ்நாடு கனிமங்கள் துறை நிா்வாக இயக்குா்)