உள்ளாட்சியிடம் இருந்த 801 சாலைகளை மேம்படுத்த ரூ.1100 கோடி நிதி ஒதுக்கீடு
- தமிழகத்தில் நடப்பாண்டில் 801 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட்ட 1500 கி.மீ நீளம் கொண்ட கிராம சாலை மாவட்ட இதர சாலைகளாக ரூ.1,100 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.
- அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.38.48 கோடியில் 28 சாலைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.56.26 கோடியில் 52 சாலைகள், திருவள்ளூரில் ரூ.18.70 கோடியில் 15 சாலைகள், வேலூரில் 23.98 கோடியில் 19 சாலைகள், திருவண்ணாமலையில் ரூ.44.78 கோடி செலவில் 32 சாலைகள், கிருஷ்ணகிரியில் 20.66 கோடியில் 24 சாலைகள்,
- தர்மபுரியில் ரூ.75.59 கோடியில் 82 சாலைகள், திருப்பூரில் ரூ.47.55 கோடியில் 30 சாலைகள், கரூரில் ரூ.29.07 கோடியில் 23 சாலைகள், திருப்பூரில் ரூ.29.82 கோடியில் 26 சாலைகள்,
- பெரம்பலூரில் ரூ.24.32 கோடியில் 19 சாலைகள், அரியலூரில் ரூ.64.32 கோடியில் 32 சாலைகள், புதுக்கோட்டையில் ரூ.71.36 கோடியில் 64 சாலைகள், மதுரையில் ரூ.28.66 கோடியில் 23 சாலைகள், திண்டுக்கல்லில் ரூ.60.07 கோடியில் 28 சாலைகள், தேனியில் ரூ.30.49 கோடியில் 21 சாலைகள்,
- நெல்லையில் ரூ.4.57 கோடியில் 5 சாலைகள், தென்காசியில் ரூ.2.93 கோடியில் 3 சாலைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.42.17 கோடியில் 25 சாலைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.5.43 கோடியில் 5 சாலைகள், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.37.59 கோடியில் 28 சாலைகள்,
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.25.45 கோடியில் 13 சாலைகள், சிவகங்கை மாவட்டத்தில் ரூ.29.54 கோடியில் 26 சாலைகள் என மொத்தம் ரூ.1100 கோடி செலவில் 801 பணிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தேஜாஸ் ரயில் எஞ்சின் உள்நாட்டிலேயே உற்பத்தி
- கொரோனா பரவலால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு தற்சார்பு பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- அந்த வகையில் இந்திய ரயில்வேயின் அதிநவீன தொழில்நட்ப வசதிகளுடன் கூடிய தேஜாஸ் ரயில் எஞ்சின்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.
- சித்தரஞ்சன் லோகமோட்டிவ் பணிமனை இந்த எஞ்ஜினின் முதல் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.
- இவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் எனவும், விரைவில் முக்கிய விரைவு ரயில்களுக்கு இந்த எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது எனவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.