Type Here to Get Search Results !

TNPSC 29th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா., மனிதாபிமான விருது
  • கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை தன்னாலான உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியது; 
  • தமிழக மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவிலிருந்து வர விமானம் ஏற்பாடு செய்து தந்தது; உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவி செய்வது என பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.இந்நிலையில், அவரது சேவையை பாராட்டி, ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய விருது' சோனு சூட்டுக்கு வழங்கப்பட்டது.
  • கடந்த 28ம் தேதி அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். இவ்விருதினை இதற்கு முன், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர். 
ஏழை நாடுகளில் 12 கோடி துரித கரோனா பரிசோதனை: உலக சுகாதார அமைப்பு ஒப்பந்தம்
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் 12 கோடி துரித கரோனா பரிசோதனைப் பொருள்களை விநியோகிப்பதற்கான திட்டத்தில், பிற மருத்துவத் தொண்டு அமைப்புகளுடன் மேற்கொண்டுள்ளோம்.
  • கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இந்தப் பரிசோதனைப் பொருள்கள் மூலம், ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளதா, இல்லையா என்பதை 15 முதல் 30 நிமிடங்களில் கண்டுபிடித்துவிட முடியும்.
  • தற்போதுள்ள பரிசோதனைப் பொருள்களைப் போல் முடிவுக்காக மணிக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
  • மேலும், துரித கரோனா பரிசோதனைப் பொருள்களின் விலையும் அதனை விட திறன் குறைந்த கருவிகளை விட மிகவும் குறைவாகும்.
  • அந்தப் பொருள்களை அதிக எண்ணிக்கையில் விநியோகிப்பதன் மூலம், பின் தங்கிய நாடுகளில் தொலைதூரப் பகுதிகள் மற்றும் ஆய்வு மையங்கள் இல்லாத இடங்களில் கூட கரோனா பரிசோதனையை விரிவுபடுத்த முடியும்.
  • இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 'ஃபவுண்டேஷன் ஃபாா் இன்னொவேடிவ் நியூ டயாக்னிஸ்' தொண்டு அமைப்பின் தலைமை செயலதிகாரி கேதரினா போமி கூறுகையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவைச் சோந்த 20 நாடுகளில் துரித கரோனா பரிசோதனைப் பொருள்களா விநியோகிக்கப்படும்.
  • இந்தச்சூழலில், 12 கோடி கரோனா துரிதப் பரிசோதனைக் கருவிகளை பின்தங்கிய நாடுகளில் விநியோகிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தியர்களின் சராசரி உடல் எடை, உயரம் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவிப்பு
  • இந்தியர்களின் சராசரி உடல் எடை, ஐந்து கிலோ அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
  • 2010ம் ஆண்டு, இந்தியாவில் ஆண்களின் சரியான எடை 60 கிலோ எனவும், பெண்களின் எடை 50 என்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்தது.
  • இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆண்களுக்கான சரியான எடையை 65 ஆக உயர்த்தியுள்ளது.
  • அதேபோல பெண்களுக்கான உகந்த எடை 55 எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆண்களுக்கு ஏற்ற உயரம் 5. 8 அடி எனவும், பெண்களுக்கு 5. 3 சரியான உயரம் என்றும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel