இந்திக கால்பந்து சம்மேளனம் விருது 2020
- இந்திய கால்பந்து அணியில், இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்துவும், சிறந்த வீராங்கனைகான விருதுக்கு சஞ்சுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கால்பந்து இந்திக கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
- மேலும் இந்த பட்டியலில் வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருதுக்கு அனிருத் தபாவும், வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை விருதுக்கு ரதன்பாலா தேவியும் தேர்வாகி உள்ளனர்.
- சிறந்த நடுவராக அஜித் குமாரும் (மணிப்பூர்), சிறந்த உதவி நடுவராக பி.வைரமுத்துவும் (தமிழ்நாடு) தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
சர்வதேச பருவநிலை இலக்கு தொடர்பான வட்ட மேஜை மாநாடு பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உரை
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியா குட்டரஸ் தலைமையில், சர்வதேச பருவநிலை இலக்கு தொடர்பான வட்ட மேஜை மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
- இதில், இந்தியா சார்பில், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பங்கேற்று பேசியதாவது:அதிக மழையும், அதிக வெப்பமும், பீஹாரின் பருவநிலை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிலத்தடி நீர் குறைந்து வருகிறது.
- வெள்ளம், வறட்சி என, பல சவால்களை சந்திக்கும் நிலையில் பீஹார் உள்ளது.இதையொட்டி, 'ஜல் ஜீவன் ஹரியாளி அபியான்' என்ற திட்டத்தின் கீழ், நீராதார சேமிப்பு மற்றும் பசுமை பராமரிப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- வேளாண் சாகுபடியில் பருவநிலை மாற்றங்களை சமாளிக்கவும், நீர் மற்றும் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சூரிய மின் சக்தி, துாய்மையான எரிபொருள், பல்லுயிரி பாதுகாப்பு முறைகளால், பீஹார் ஸ்திரமான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது.
- இயற்கை வனப் பகுதிகள் தவிர்த்து, சமூக பங்களிப்புடன் மரக் கன்று நடும் திட்டங்களை பரவலாக்கி, பசுமை மாநிலமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உலக வெப்பநிலை, 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் இருக்க வேண்டும் என, ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.
- இதை அடைவதற்கு, பசுமை திட்டங்கள் மூலம், கரியமில வாயுவின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில், பீஹார், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
ஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு
- ஐ.என்.எஸ்., என்றழைக்கப்படும், 'இந்திய பத்திரிகைகள் சங்கத்தின்' புதிய தலைவராக, ஆதிமூலம் லட்சுமிபதி, ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
- அகில இந்திய அளவில், 800 பத்திரிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புதான் ஐ.என்.எஸ். என, அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம். இதன் 81வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது.
- இதில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதி, இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டுகளுக்குப்பின், தற்போதுதான் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரள சுகாதாரத் துறைக்கு முதல் முறையாக ஐநா விருது
- கேரள மாநிலம், தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியது மற்றும் அது தொடர்பான இலக்குகளை நோக்கிய நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, சர்வதேச விருது பெற்றுள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையின் UN Interagency Task Force (UNIATF) விருது, இந்த வருடம் கேரள மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.நா-வின் விருது, ஒரு நாட்டின் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- 2019-ம் ஆண்டில், தொற்றில்லா நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், மனநல சிகிச்சைக்குக் கொடுத்த முக்கியத்துவத்துக்காகவும் தொற்றில்லா நோய்களைச் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் நிறுவி அதில் வெற்றி பெற்றதற்காகவும் அந்த அமைச்சகங்களைக் கௌரவிக்க வழங்கப்படும் விருது, ஐ.நா-வின் இந்த விருது.
- கேரளா அரசு, ஐ.நா-வின் இந்த விருதைப் பெறுவது இதுதான் முதல்முறை. ஐ.நா அமைப்பு கேரள மாநிலத்தைத் தவிர உலகில் வேறு 6 அமைச்சகங்களுக்கும் இந்த விருதை வழங்கியுள்ளது.
- கேரளா அரசின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கும் மாநில நுரையீரல் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், புற்றுநோய் சிகிச்சைத் திட்டம் மற்றும் பக்கவாத நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.