ஆகஸ்ட் 9: உலக பழங்குடியினர் தினம்:
- சர்வதேச பழங்குடிகள் தினம் 1982ம் ஆண்டு முதல் 39 ஆண்டாக ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்பூர்வகுடியினர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் பழங்குடி மக்களின் வாழ்வியல், கலை, கலாச்சாரம், மொழி, மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றது. உலகெங்கிலும் பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் மற்றும் பழங்குடியின மக்கள் இது தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா கோரப்பிடியில் உலக நாடுகள் சிக்கி தவிக்கும் சூழலில் ‘’கோவிட் 19 - பழங்குடி மக்களின் மீள்திறனும்’’ எனும் தலைப்பில் காணொளி கருத்தரங்கமாக மட்டுமே நடைபெறும் சூழல் உள்ளது.