- சீனாவுக்கு எதிராக உலக நாடுகளின் அணிதிரட்டலுக்கு, இந்தியா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவின் கடல்சார் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை ரோந்துகள், பயிற்சிகளில் ஈடுபடுகிறது.
- இந்திய பசிபிக் மண்டலத்தில் இந்த நாடுகளின் கடற்படை சமீபகாலமாக மேலும் தங்களது நட்பை பலப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் PASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் பங்கேற்கும் ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
- உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் என்றழைக்கப்படுவது அமெரிக்காவின், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்பதாகும்.
- இந்தப் போர்க்கப்பல், இந்திய கடற்படை போர்க்கப்பல்களுடன், பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தவிர, டிக்கோடெரோகா, யுஎஸ்எஸ் பிரின்ஸ்டன், யுஎஸ்எஸ் ஸ்டெரெட் மற்றும் யுஎஸ்எஸ் ரால்ப் ஜான்சன் ஆகிய போர்க் கப்பல்களும், இன்று இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்றன.
- கடந்தமாதம் இதுபோன்ற கடற்படை பயிற்சியில், ஜப்பான் நாட்டு கடற்படையுடன் இணைந்து செயல்பட்டது இந்திய கடற்படை. அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் கடந்த சனிக்கிழமை மலாக்கா நீரிணை வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது.
- யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சுமார் 100,000 டன் எடையுள்ளது. 90 போர் விமானங்களை சுமக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
PASSEX என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் பங்கேற்கும் ராணுவ ஒத்திகை
July 21, 2020
0
Tags