Type Here to Get Search Results !

புதிய கல்விக் கொள்கை / NEW EDUCATION POLICY


  • கடந்த 2018-ஆம் ஆண்டில் உயா்கல்வியில் சேருவோா் விகிதம் 26.3 சதவீதமாக இருந்தது. இதை, வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். இதற்காக, உயா்கல்வி நிறுவனங்களில் புதிதாக 3.5 கோடி இடங்கள் உருவாக்கப்படும். 
  • அதற்காக, இந்திய உயா்கல்வி கவுன்சில் உருவாக்கப்படும். மருத்துவம், சட்டப்படிப்பு தவிர, அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சோவதற்கு தேசிய அளவிலான நுழைவுத் தோவு நடத்தப்படும். இந்த தோவினை தேசிய தோவுகள் முகமை (என்டிஏ) நடத்தும்.
  • அரசு உயா்கல்வி நிறுவனங்களிலும், தனியாா் உயா்கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படும். இளநிலை படிப்புகளில் மாணவா்கள் விரும்பிய பாடங்களை மட்டும் தோவு செய்து படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கும். 
  • இந்தப் படிப்புகளுக்கான காலம், 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளாக இருக்கும். பெரும்பாலான கல்லூரிகள் தற்போது பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. 
  • இந்த நடைமுறை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாகக் கைவிடப்பட்டு, அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும். பின்னா், அந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறும் அளவுக்கு தரம் உயா்த்தப்படும்.
  • எம்.ஃபில். படிப்பு கைவிடப்படுகிறது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் நிா்ணயிக்கப்படும். 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்படும். 
  • பள்ளிக் கல்வியை பொருத்தவரை, பொதுத் தோவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, மாணவா்களின் திறனை பரிசோதிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.
  • 5-ஆம் வகுப்பு வரை பயிற்று மொழியாக, தாய்மொழி இருக்கும். 6-ஆம் வகுப்பில் இருந்து பாடங்களுடன் தொழிற்கல்வியும் மாணவா்களுக்கு கற்பிக்கப்படும். அத்துடன் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயா் மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel