Type Here to Get Search Results !

கௌதன் நியாய யோஜனா / Gaudhan Nyay Yojana

  • சட்டீஸ்கரில் கடந்த ஜூன் 25ம் தேதி 'Gaudhan Nyay Yojana' என்ற திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்தார். நகரங்களில் கால்நடைகள் விபத்துகளால் உயிரிழக்கின்றன. 
  • அதுமட்டுமல்லாமல் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின்னர் மாட்டின் உரிமையாளர்களால் அவை கைவிடப்படுகின்றன. அதனால் பசு வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு முதல்வர் அறிவுறுத்தினார். 
  • அதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உரிமையாளர்களிடம் இருந்து மாட்டு சாணத்தை கொள்முதல் செய்ய அம்மாநில வேளாண்துறை முடிவெடுத்துள்ளது.
  • மாநிலத்தில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதும், அவற்றால் விவசாயிகள் பயனனடைவதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம். ஜூலை 20 முதல் ஒரு கிலோ மாட்டு சாணத்துக்கு ரூ.1.50 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை கூறியுள்ளது. 
  • மாட்டு சாணம் வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாத்தல், மண்புழு உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாட்டு சாணத்தை கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக மாநில வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel