Type Here to Get Search Results !

வனத்துக்குள் திருப்பூர் திட்டம்

  • 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட பாணியில், நாடு முழுதும், 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படுகின்றன. வரும் 2025க்குள், நாடு முழுதும், நகர் வன திட்டத்தின் கீழ், 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படுகின்றன. 
  • மத்திய வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இதற்கு முனைப்பு காட்டி வருகிறது. நகர்மயமாதல் பெருகி வரும் நிலையில், நகரங்களில், காற்று மாசு பெருகி வருகிறது. வனங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும் பல்லுயிர்ப் பெருக்கம் அவசியமாகிறது. 
  • இந்தாண்டு கடைபிடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தில் (ஜூன் 5), 'பல்லுயிரைக் கொண்டாடு' என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.
  • நகர்மயமாதலால், உணவுச்சங்கிலியில் ஏற்படும் நிலையில்லா தன்மையைக் குறைத்து, சுற்றுச்சூழலைக் காப்பதே நகர் வன திட்டத்தின் குறிக்கோள்.
  • வேம்பு, வில்வம், ஆல், அரசு, புங்கன், வேங்கை, மருதம், நாவல், நெல்லி, கொய்யா, மாதுளை, சிசு, மலைவேம்பு, பூவரசு உள்ளிட்ட 59 வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
  • நகர்ப்புறக் காடுகள் 'மியாவாகி' முறையில் அமைய உள்ளன. இந்த இடங்கள், பூங்காக்களாகவும் உருவாக்கப்படும். திருப்பூரில் செயல்படுத்தப்பட்டு வரும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், தேசிய அளவில் பாராட்டு பெற்று வருகிறது.
  • நகர் வனத்திட்டத்திற்கு, இது முன்னுதாரணமாக விளங்குகிறது. திருப்பூர் பாணியை பின்பற்றி, கோவை, சேலம் உட்பட பல்வேறு நகரங்களிலும், இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதில், தன்னார்வலர்களும், அரசு நிர்வாகத்தினரும் முயற்சி செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel