Type Here to Get Search Results !

ரயில் 18 திட்டம் / TRAIN 18 SCHEME

  • கடந்த 2018-19ம் ஆண்டில் ஐசிஎப்பில் ரயில்-18 திட்டம் வந்தே பாரத் அதிவேக ரயிலுக்கான நவீன தொழில்நுட்பத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில் 18ல் இரண்டு உயர்வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
  • மொத்தம் 1,128 இருக்கைகள் கொண்டதாகவும், வைஃபை வசதியும், ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் வழங்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன உணவு தயாரிக்கும் இடம், அதை விநியோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
  • ரயில் பெட்டியின் படிக்கட்டுகள், கதவுகள் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டு கடந்த 2018-19ல், ரயில் 18 திட்டத்தில், 160 கி.மீ, வேகத்தில் இயங்கக் கூடிய வந்தே பாரத் ரயிலுக்கு முதல்கட்டமாக இரண்டு ரயில்களுக்கான 36 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்துக்கு வழங்கப்பட்டன. 
  • இந்த இரண்டு ரயில்களும் டெல்லியில் இருந்து வாரணாசி மற்றும் ஜம்மு -காஷ்மீர், ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா நிலையத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
  • மேலும் 2019-20ம் நிதி ஆண்டில் 4,200 பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அதிவேக ரயிலுக்கான பெட்டிகளை, சென்னை ஐ.சி.எப்.பில் தொடர்ந்து தயாரிக்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
  • ஒரு ரயிலுக்கு 18 பெட்டிகள் வீதம் 44 ரயில்களுக்கான, 792 அதிவேக ரயில் பெட்டிகள், ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட உள்ளன. இப்பெட்டிகளுக்கான தளவாடங்களை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel