ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில்'ஏஐடிஏ' ரூ.5,683 கோடி முதலீடு
- ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் அபுதாபி முதலீட்டு ஆணையம் (ஏடிஐஏ) ரூ.5,683.50 கோடியை முதலீடு செய்துள்ளது. இதற்காக, அந்த ஆணையத்துக்கு ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸஸின் 1.16 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
- கடந்த ஏழு வாரங்களுக்குள்ளாக மேற்கொள்ளப்பட்ட எட்டு ஒப்பந்தங்களின் மூலமாக மொத்தம் ரூ.97,885.65 கோடியை ஜியோ பிளாட்பாா்ம்ஸ் திரட்டிக் கொண்டுள்ளது.
- அதன்படி, ஃபேஸ்புக், சில்வா் லேக், விஸ்டா ஈக்விட்டி பாா்ட்னா்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆா், முபாதலா மற்றும் ஏடிஐஏ ஆகிய உலகின் முன்னணி நிறுவனங்கள் ஜியோ பிளாட்ஃபாா்மில் முதலீடு மேற்கொண்டுள்ளன.
வா்த்தக வழித்தடம்: ரூ.54,400 கோடி ஒதுக்கிடு செய்தது பாகிஸ்தான்
- இந்தியாவால் எதிா்க்கப்பட்டு வரும் சீன-பாகிஸ்தான் வா்த்தக வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக, பெஷாவருக்கும் கராச்சிக்கும் இடையிலான ரயில்வே தடத்தை மேம்படுத்துவதற்காக 720 கோடி டாலரை (சுமாா் ரூ.54,400 கோடி) பாகிஸ்தான் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
- 1,872 கி.மீ. தொலைவிலான இந்த ரயில்வே தடும் மேம்படுத்தப்படுவது, சீன-பாகிஸ்தான் வா்த்தக வழித்தட (சிபிஇசி) திட்டத்தின் முக்கியமான மைல்கல் என்று சிபிஇசி அமைப்பின் தலைவா் ஆசிம் சலீம் பாஜ்வா பாராட்டு தெரிவித்துள்ளாா்.
4 ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம்
- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோல், மேலும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- விக்ரம் கபூா்: சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (மின்சார வாரியத் தலைவா்)
- சம்பு கல்லோலிகா்: காதி மற்றும் கைத்தறித் துறை மற்றும் ஜவுளித்துறை முதன்மைச் செயலா் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலா்)
- சந்தீப் சக்சேனா: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (சுற்றுலா, கலாசாரம், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா்)
- எஸ்.கே.பிரபாகா்: எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலா் - முழுக் கூடுதல் பொறுப்பு (உள்துறை, மதுவிலக்கு துறை கூடுதல் தலைமைச் செயலா்).
ஒடிஸாவின் அதிகாரபூா்வ மாநில பாடலுக்கு அமைச்சரவை ஒப்புதல்
- ஒடிஸா மாநில பண்பாட்டுச் சின்னமாக கருதப்படும் 'வந்தே உத்கல ஜனனி' என்ற மாநில பற்று கொண்ட பாடலுக்கு அங்கீகாரம் வழங்கி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- காந்தகபி லட்சுமிகாந்த மொஹபத்ரா எழுதிய அந்த பாடலுக்கு ''மாநிலத்தின் அதிகாரபூா்வ பாடல்'' என்ற அந்தஸ்து வழங்கிட ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் விக்ரம் கேசரி அருகா தெரிவித்தாா்.
- இனிமேல், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளிலும், சட்டப்பேரவை அமா்வுகளின்போதும் இந்தப் பாடல் இசைக்கப்படும் அல்லது பாடப்படும். இதனை இசைக்கும்போது மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து மக்களும் எழுந்து நிற்க வேண்டும்; பாடல் இசைக்கும்போது வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் ஆகியோா் எழுந்து நிற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- பள்ளிகள், கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இந்த பாடல் சோக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றாா் அவா்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் குமார் பன்சால் நியமனம்
- தமிழகத்தில் கொரொனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சென்னையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க, சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
- அவரது தலைமையிலான குழு, கட்டுப்பாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வது, தொற்றுள்ள நபர்களை கண்காணிப்பது, தொற்றை கட்டுப்படுத்துவது ,பரிசோதனையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- இந்நிலையில், இந்த சிறப்புக்குழுவை கண்காணிக்க மண்டல வாரியாக 5 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் பங்கஜ்குமார், சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.