Type Here to Get Search Results !

துன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம் / World Day Against Persecution

  • மே 4ஆம் தேதியை துன்புறுத்தலுக்கு எதிரான உலக தினம். அதனை அனுசரிக்கும் விதமாக அனைவரும் இளஞ்சிவப்பு மேல் சட்டை அணிவது வழக்கம். அத்தகைய வழக்கம் தொடங்கியது கனடாவில். 
  • கனடாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது நோவா ஸ்கோஷியா(Nova Scotia) மாநிலம். Chuck McNeill எனும் 9ஆம் வகுப்பு மாணவன் அங்கு 2007ஆம் ஆண்டில், பள்ளி தொடங்கும் முதல் நாளில் இளஞ்சிவப்பு வண்ண மேல்சட்டை அணிந்து சென்றான். 
  • அதனாலேயே துன்புறுத்தலுக்கு ஆளானான். அதனையடுத்து, அவனது சக மாணவர்கள் டேவிட் ஷெஃபர்ட்(David Shepard), ட்ராவிஸ் ப்ரைஸ்(Travis Price) இருவருக்கும் ஒரு யோசனை தோன்றியது.
  • 50 இளஞ்சிவப்பு வண்ண T-சட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு வழங்கினர். மறுநாள் அவற்றை அணிந்துவரும்படி கேட்டுக்கொண்டனர். 
  • தகவல் அறிந்த வேறு சிலரும் தங்களிடமிருந்த இளஞ்சிவப்பு வண்ண ஆடைகளை அணிந்து மறுநாள் பள்ளிக்கு வந்தனர். அது கனடா முழுவதும் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 
  • கனடா உள்பட, உலகில் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு நாளில் அதை அனுசரிக்கின்றன. ஐக்கிய நாட்டு நிறுவனம் 2012இல் மே 4ஆம் தேதியை துன்புறுத்தலுக்கு எதிரான தினமாக அறிவித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel