Type Here to Get Search Results !

18th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

விவசாய கடன் வழங்கிட கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகளுக்கு நபாா்டு வங்கி ரூ.20,500 கோடி ஒதுக்கீடு
  • ரூ.20,500 கோடியில் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.15,200 கோடியும், மீதமுள்ள ரூ.5,300 கோடியை பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் ஆா்ஆா் வங்கிகளுக்கு சிறப்பு பணப்புழக்க வசதியை மேம்படுத்துவதற்காக வழங்கியுள்ளோம்.
  • பருவ மழைக்காலத்துக்கு முந்தைய மற்றும் கரீஃப் பருவத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காகவும், அவா்களிடம் போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காகவும் இந்த நிதி வழங்கப்படுகிறது.
  • கிசான் கடன் அட்டைகளை (கேசிசி) நிறைவு செய்யும் திட்டத்தையும் வங்கிகள் தொடங்கியுள்ளன. கடந்த 2 மாதங்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆா்ஆா் வங்கிகள் மூலம் சுமாா் 12 லட்சம் புதிய கேசிசி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நபாா்டு வங்கியின் தலைமை பொது மேலாளா் (மறுநிதியளிப்புத் துறை) ஜிஜி மாமன் கூறுகையில், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆா்ஆா்பிக்களுக்கு நபாா்டு ரூ. 5,000 கோடி கடன் வழங்கியிருந்தது.
  • ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ. 25,000 கோடி சிறப்பு மறுநிதியளிப்பில் இருந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆா்ஆா்பிக்கு கடன் வழங்குவதற்காக ரூ. 23,000 கோடியும், எம்.எஃப்.ஐ.களுக்கு ரூ. 2,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 73வது, உலக சுகாதார கூட்டம்
  • சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி இன்று லட்சக்கணக்கான மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது கரோனா வைரஸ். இந்நிலையில் இந்த வைரஸ் பரவலில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகக் குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியுதவியும் நிறுத்தியுள்ளது. 
  • இந்நிலையில் இந்த விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 62 நாடுகள் ஒன்றிணைந்து, இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என முடிவெடுத்தன.
  • ஜெனீவாவில் இன்று நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 73-வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் இந்த 62 நாடுகளும் சேர்ந்து இதற்கான திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளது, அதைத்தொடர்ந்து அதுகுறித்து விவாதம் நடபெறவும் உள்ளது. 
  • கரோனா வைரஸ் எவ்வாறு உருவானது, விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது, அதைத்தடுக்க உலக சுகாதார அமைப்பு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது என்பது குறித்து விசாரணை நடத்த இந்த நாடுகள் முடிவெடுத்துள்ளன. இந்த சூழலில் இந்த 62 நாடுகளின் முடிவுக்கும் இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
பந்தை பளபளப்பாக்க புதிய விதி
  • கிரிக்கெட் போட்டியின் போது பந்துவீச்சாளர்கள் பந்தை வியர்வை கொண்டோ அல்லது எச்சில் கொண்டோ பளபளப்பாக்குவது வழக்கம். ஆனால், கொரோனோ வைரஸ் எச்சில் மூலம் பரவும் என்பதால் வீரர்கள் பந்தை எச்சில் மூலம் பளபளப்பாக்கும் செயலுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனில் கும்ப்ளே தலைமையிலான தொழில்நுட்ப குழு, மருத்துவ துறை தலைவருடன் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
  • இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், வியர்வை மூலம் கொரோனோ வைரஸ் பரவுவது உறுதி செய்யப்படாததால் வீரர்கள் வியர்வை மூலம் பந்தை பளபளப்பாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் போட்டி நடைபெறும் நாட்டில் உள்ள சர்வதேச நடுவர்களையே கள நடுவர்களாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரண்டு அணிகளுக்கு போட்டி என்றால் அந்த நாட்டு நடுவர்களை தவிர மற்ற நாடுகளை சேர்ந்த நடுவர்களே போட்டியின் போது கள நடுவர்களாக நியமிக்கப்படுவர்.
  • தற்போது, ஊரடங்கு அமலில் இருப்பதால் விமான பயணம் சிக்கலாக அமைந்துள்ளது. இதனால் நடுவர்கள் பயணம் மேற்கொள்வதும் சிக்கலாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel