- பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் எதிராகப் கரோனா தொற்றை தடுக்க போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வளர்கள், ஒப்பந்த பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 22.12 லட்சம் பொது சுகாதார சேவையாளர்களுக்கு தொண்ணூறு (90) நாட்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு இது காப்பீடு அளிக்கும். இதில் சமுதாய சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவார்கள்.
- கோவிட்-19 பாதித்த நோயாளிளுடன் நேரடியான தொடர்பில் ஈடுபட்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் பரவும் ஆபத்து வாய்ப்பில் இருக்கும் இந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. கோவிட்-19 தாக்கி எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்தக் காப்பீடு கிடைக்கும்.
- முன் எப்போதும் சந்தித்திராத சூழ்நிலைகள் காரணமாக, கோவிட் - 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்ற அழைக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை அலுவலர்கள்/ ஓய்வுபெற்ற / தன்னார்வலர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / ஒப்பந்த / தினசரி கூலி அடிப்படையிலான / தற்காலிக / அயல்பணி அடிப்படையில் மாநில / மத்திய அரசு மருத்துவமனைகள் / மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசுகள், எய்ம்ஸ் & INI தன்னாட்சி மருத்துவமனைகள் / மத்திய அமைச்சகங்களின் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைவரும் இதில் சேர்க்கப்படுவார்கள்.
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு உட்பட்டு இந்த நேர்வுகளும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படும்.
- பயனாளி வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருந்தாலும், அதற்கும் கூடுதலாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்கள் கிடைக்கும்'.
பிரதமரின் கரீப் கல்யாண் காப்பீட்டுத் திட்டம் / PRIME MINISTERS GARIB KALYAN YOJANA
March 30, 2020
0