Type Here to Get Search Results !

28th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

100 நாள் வேலை திட்டம் நிலுவை ஊதியம் வழங்க ரூ.4,431 கோடி ஒதுக்கீடு: ஏப்.10ம் தேதி கிடைக்கும்
  • கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் நிலுவை ஊதிய தொகையை வழங்க முதற்கட்டமாக 4,431 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. நாடு முழுவதும் முழு ஊரடங்கால், தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
  • இக்கட்டான இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை தொகை உடனடியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 11,499 கோடி மொத்த தொகையில், முதற்கட்டமாக 4,431 கோடி நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இந்த தொகை வரும் ஏப்ரல் 10ம் தேதி அனைத்து பயனாளர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 8.17 கோடி பேர் பணியாற்றி வருகின்றனர். 
  • கடந்த ஆண்டு ஏற்பட்ட புல்புல் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களுக்கு கூடுதலாக 5,751 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கேரளா, மகாராஷ்டிரா, பீகார், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகியவை பெறுகின்றன.
கரோனா பாதிப்பு: ரூ.1,500 கோடி வழங்குகிறது டாடா குழுமம்
  • கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் ரூ.1,500 கோடியை வழங்க டாடா குழுமம் முடிவெடுத்துள்ளது. 
  • டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ், ரூ.1000 கோடியும் டாடா அறக்கட்டளை ரூ.500 கோடியும் வழங்கவுள்ளன.
  • டாடா அறக்கட்டளை அளிக்கவுள்ள நிதியானது, மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கான தற்காப்பு உபகரணங்கள், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க செயற்கை சுவாசக் கருவிகள், நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.



நாட்டின் பொருளாதார வளா்ச்சி 2% மட்டுமே: இக்ரா
  • வரும் 2020-21-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வெறும் 2 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளா்ச்சி பெறும் என தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
  • முடங்கியுள்ள பொருளாதார வளா்ச்சியை மீட்டெடுப்பதற்காக ரிசா்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், நடப்பாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4.5 சதவீதம் பின்னடைவைக் காண அதிக வாய்ப்புகள் உள்ளது. 
கொவைட்-19: ரூ.51 கோடி வழங்கியது பிசிசிஐ
  • கொவைட்-19 பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிரதமா் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி நிதியை வழங்கியுள்ளது.
  • பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி, செயலாளா் ஜெயா ஷா, இதர நிா்வாகிகள் மற்றும் மாநில சங்கங்கள் இணைந்து ரூ.51 கோடி நிவாரண நிதியை வழங்க தீா்மானித்தனா். இதன் மூலம் கரோனா பாதிப்பை எதிா்த்து போராட உதவியாக அமையும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel