Type Here to Get Search Results !

25th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2,188 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு
  • தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். 
  • இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சத்து 46,993 அரிசி குடும்ப அட்டைகள் இருப்பதாகவும் இந்த அட்டைகளுக்கு ரூ.1000 வீதம் நிவாரணத் தொகை வழங்க ரூ.2014 கோடியே 69 லட்சத்து 93,000 நிதி தேவைப்படும் என்றுமதிப்பிட்டு அரசுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் கடிதம் அனுப்பினார். 
  • இதையடுத்து, அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வீதம் நிவாரணம் மற்றும் இலவச பொருட்களை ஏப்ரல் மாதத்துக்கு மட்டுமே வழங்க உணவுப்பொருள் வழங்கல் ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் சானடோரியம், மதுரை தோப்பூரில் கொரோனா வைரஸ் சிறப்பு தனி மருத்துவமனை
  • கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்க அதன்படி தாம்பரம் சானிடோரியம் மதுரை தோப்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தனி மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. 
விழித்திரு விலகி இரு வீட்டில் இரு : முதல்வர் வேண்டுகோள்
  • மத்திய அரசின் உத்தரவு படி 21 நாள் ஊரடங்கை நாம் அனைவரும் கடைபிடிப்போம் என தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உரையாற்றினார். 
  • கொரோனாவை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொறுப்பான குடிமகனாக இருந்து நம்மையும் சமூகத்தையும் பாதுகாப்போம். 
  • முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றால் சமூக விலக்கலை கடைபிடிக்க வேண்டும். ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து கொரோனாவை ஒழிக்க போராடுவோம். 
  • 21 நாட்கள் என்பது விடுமுறை அல்ல குடும்பத்தை காக்க அரசு விடுத்திருக்கும் உத்தரவு. கொரோனாவை விரட்டட உறுதிஏற்போம்.
  • கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாக மருத்துவமனைகளில் 10 ஆயிரத்திற்கும், மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.
  • மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நடைபாதை வியாபாரிகளின் நலன்காக்க அரசுஅறிவித்துள்ள ரூ. 1000 த்துடன் மேலும் கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
1 முதல் 9ம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்': தமிழக அரசு அறிவிப்பு
  • ஊரடங்கு உத்தரவை அடுத்து தமிழகத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம்: திருச்சி, விழுப்புரத்திலும் விரைவில் தொடக்கம்
  • சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தேனி, திருவாரூா், திருநெல்வேலி, கோவை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. 
  • இவை தவிர, சென்னை அப்பல்லோ மருத்துவமனை, வேலூா் சிஎம்சி மருத்துவமனை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியுபொக் எா்லிச் என்ற ஆய்வகம் ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் மதுரை, திருச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கியுள்ளது.



சேவையை நிறுத்தியது 'பிளிப்கார்ட்' நிறுவனம்
  • நாடு, 21 நாட்கள் முடக்கப்படுவது குறித்து, உள்துறை அமைச்சகம் கடந்த, 24ம் தேதியன்று ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், பிளிப்கார்ட் நிறுவனம், தற்காலிகமாக சேவையை நிறுத்திக் கொள்கிறது. 
  • எவ்வளவு விரைவாக மீண்டும் சேவையை வழங்க இயலுமோ, அவ்வளவு விரைவில் வழங்குவோம்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.இதற்கிடையே, அமேசான் இந்தியா நிறுவனமும், அத்தியாவசிய பொருட்களுக்கான ஆர்டரை மட்டுமே கையாளப் போவதாக அறிவித்துள்ளது. 
ரேஷன் கடைகளில் கூடுதல் உணவுப்பொருள்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூடுதலாக உணவுப்பொருள் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி போ பயன்பெற்று வருகிறாா்கள். இந்த திட்டத்தின் கீழ் சந்தையில் கிலோ ரூ.27-க்கு விற்பனை செய்யப்படும் கோதுமை ரூ.2-க்கும், கிலோ ரூ.32-க்கு விற்பனை செய்யப்படும் அரிசி ரூ.3-க்கும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. 
  • மேலும், இத்திட்டத்தின் கீழ் நபா் ஒன்றுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. தற்போது கூடுதலாக 2 கிலோ சோத்து 7 கிலோ உணவு தானியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 
  • இந்த உத்தரவை பின்பற்றி உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
  • பிராந்திய ஊரக வங்கிகளை ரூ.1,340 கோடி மறுமுதலீட்டில் வலுப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மத்திய அரசு சாா்பில் ரூ.670 கோடி, வங்கிகள் சாா்பில் ரூ.670 கோடி சோத்து ரூ.1,340 கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
  • ஆயத்த ஆடைகள் மற்றும் ஏற்றுமதி ஆடைகளுக்கான வரி விதிப்பு திட்டம் அமல்படுத்தப்படும் வரை மத்திய, மாநில வரிச் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பதற்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Hydroxychloroquine மாத்திரைகள் ஏற்றுமதிக்கு தடை
  • மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரைத்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு.
  • ஹைட்ராக்ஸிகுளோரோகின் மற்றுமின்றி இதனை தயாரிக்க பயன்படும் அம்ற்ற மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 



கோவில் பணிகள் துவக்கம்; புதிய இடத்தில் ராமர் சிலை
  • உ.பி.,யில், உள்ள அயோத்தியில், புதிதாக ராமர் கோவில் கட்டும் பணி துவங்கவுள்ளது. இதற்காக, தற்காலிக கோவிலில் உள்ள ராமர் சிலை, அருகில் உள்ள பகுதிக்கு மாற்றும் நிகழ்ச்சி, நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடைபெற்றது. 
  • ராமஜென்மபூமி கோவில் கருவறையில் இருந்து, 27 ஆண்டுகளுக்குப் பின், ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
  • கொரோனா காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்நிகழ்ச்சி யில், முதல்வர், யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செயலர், சம்பத் ராய் உள்ளிட்ட சிலர் மட்டும் பங்கேற்றனர். 
  • தற்போதைய கோவிலில் இருந்து, முதல்வர், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நால்வர், ராமர் சிலையை பல்லக்கில் சுமந்து சென்று, புதிய இடத்தில், 9.5 கிலோ எடையுள்ள, வெள்ளி சிம்மாசனத்தில் வைத்தனர். பின், முதல்வர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு பேரிடர் மேலாண்மை சட்டம் நிறைவேற்றம்
  • இந்தியாவின் முழுமையான பூட்டுதல் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமரால் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, மாநில கட்டுப்பாடுகள் மீறப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவதாகவும், அவர்கள் வாகனங்கள் வீட்டுக்குள் இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.
  • இந்தியாவில் 536 கொரோனா வைரஸ் தொற்றுகள், 10 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 3 வார முடக்கம் தொற்று பரவுதல் சங்கிலியை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எதிர்வரும் மாதங்களில் தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு ரூ.15,000 கோடி செலவிட வேண்டும்.
  • அத்தியாவசிய சேவைகள் குறித்த வழிகாட்டுதல்களை மையம் வெளியிட்டுள்ளது. நாடுதழுவிய முடக்கத்தின் போது மக்கள் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாது. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள், சிறை நேரத்தை எதிர்கொள்ள முடியும்.
  • தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 முதல் முறையாக செயல்படுத்தப்பட்டது.
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வணிகங்களுக்கான நிவாரணப் பொதியை அறிவித்தார், வரி இணக்கம் மற்றும் திவால் விதிகளை தளர்த்தினார்.
  • செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கி அரை மணி நேரம், ரிசர்வ் வங்கி இந்திய மேடையில் யாரும் பத்திரத்தை வாங்கவோ விற்கவோ இல்லை.
  • காய்கறி விலைகள் பெரும்பாலான நகரங்களில் இணைப்பு இல்லாததால், பதுக்கல் மற்றும் பீதி வாங்குதல் ஆகியவற்றால் அதிகரித்து வருகின்றன.
  • உடனடி விளைவைக் கொண்டு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு மையம் தடை விதித்துள்ளது. சில வகையான மலேரியாவைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் முகவர் பயன்படுத்தப்படுகிறது.
  • செவ்வாயன்று தனது நாடு தழுவிய உரையில், பிரதமர் மோடி பூட்டுதலுக்கான பொருளாதார செலவை நாடு ஏற்க வேண்டியிருக்கும், ஆனால் ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் காப்பாற்றுவது அவரது முன்னுரிமை மற்றும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் முன்னுரிமை மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் முன்னுரிமை.
  • வைரஸ் நெருப்பைப் போல பரவுகிறது என்பதைக் குறிப்பிட்டு, பிரதமர், 21 நாட்களுக்கு அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டால், நாடு, ஒரு குடும்பம் 21 ஆண்டுகளுக்கு பின்னால் செல்ல முடியும்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் 90% அலுவல்
  • நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 3ம் தேதி பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 
  • இதையடுத்து இம்மாதம் 2ம் தேதி தொடங்கி நடந்த அவை கூட்டம், வைரஸ் பரவல் காரணமாக, கடந்த திங்கட்கிழமை இரு வாரங்களுக்கு முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது. 
  • முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒன்பது அமர்வுகள் இருந்தன. இரண்டாவது கட்டத்தில் இரண்டிலும் 14 அமர்வுகள் இருந்தது.
  • கொரோனா காரணமாக உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் அவைகள் இரு வாரங்களுக்கு முன்பாக முடித்து வைக்கப்பட்டது. இந்த தொடரில் 19 மசோதாக்கள் (மக்களவையில் 18ம், மாநிலங்களவையில் 1ம் அறிமுகம் செய்யப்பட்டது). 
  • மக்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 12 ஆகும். 
  • இதில் முக்கியமானது நிதி மசோதா ஆகும். இது கடந்த திங்கட்கிழமை அவை தள்ளி வைக்கப்படுவதற்கு முன்பாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 90 சதவீத அலுவல்களும், மாநிலங்களவையில் 74 சதவீத அலுவல்களும் முடிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel