சிறப்பு வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது
- டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்திருந்தார்.
- பிப்.,19 தலைமை செயலகத்தில் முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இதனையடுத்து இந்த மசோதாவை முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் தாக்கல் செய்தார். அனுமதி கிடைக்காது.
காவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதாவின் அம்சங்கள்
- மசோதாவின் படி, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இரும்பு உருக்காலை, செம்பு, அலுமினிய உருக்காலை, விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு ஆய்வு எடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த தடை தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதிலும் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, ப.கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கும் பொருந்தும்.
- வேளாண் மண்டல சட்டம் அமல்படுத்துவதற்கு முன்னர் இந்த பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு பாதிப்பு இல்லை. துறைமுகம், குழாய் இணைப்பு சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு ஆகியவை இந்த சட்டத்தினால் பாதிக்கப்படாது.
- இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றுவதற்கு 30 உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் துணை முதல்வர், நிதித் துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், தமிழக வேளாண் பல்கலை துணைவேந்தர் உள்பட 30 பேர் குழுவில் இருப்பர்.
- இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அது போல் ரூ 50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும்.
கருவுறுதல் கிளினிக்குகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இனப்பெருக்க உதவி சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள கிளினிக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, அதாவது இன்-விட்ரோ கருத்தரித்தல் (ஐவிஎஃப்), செயற்கை கருவூட்டல் மற்றும் வாடகைத்தாய்.
- உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) ஒழுங்குமுறை மசோதா, 2020 என அழைக்கப்படும் இந்த மசோதா, கருவுறாத தம்பதிகளுக்கு சிகிச்சையளிக்கும் மையங்களை 'பாதுகாப்பு மற்றும் முறையான வழிமுறைகளை' பின்பற்ற ஒழுங்குபடுத்தும் ஒரு மசோதாவாக இந்த மசோதா இருக்கும் என்று கூறப்படுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம், 2020 ஆம் ஆண்டு கர்ப்பம் தொடர்பான மருத்துவ முடிவு (திருத்தம்) மசோதாவைத் தெளிவுபடுத்திய பின்னர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
- இந்தியாவின் கருவுறாமை பிரச்சினை பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான இனிட்டோ நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் திருமணமான தம்பதிகளில் சுமார் 10-15 சதவீதம் பேர் அல்லது சுமார் 27.5 மில்லியன் தம்பதிகள் கருவுறாமைக்கு ஆளாகின்றனர்.
- இத்தகைய தம்பதிகள் கட்டுப்பாடற்ற ஏ.ஆர்.டி ஆய்வகங்களின் சேவைகளை எடுத்துக்கொள்கிறார்கள், அவற்றில் விந்து தானம், கருப்பையக கருவூட்டல் (ஐ.யு.ஐ), ஐ.வி.எஃப், இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி (ஐ.சி.எஸ்.ஐ), முன்கூட்டியே மரபணு நோயறிதல் (பி.ஜி.டி) மற்றும் கர்ப்பகால வாடகைத்தாய் ஆகியவை அடங்கும்.
அமெரிக்க ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல்
- அமெரிக்காவிலிருந்து 24 லாக்ஹீட் மார்டின் எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்களை (24 Lockheed martin MH-60 Romeo Helicopters) வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சரவை குழு (சி.சி.எஸ் - Cabinet Committee on Security) ஒப்புதல் அளித்தது.
- டிரம்பின் இரண்டு நாள் இந்தியா பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவின் கடற்படை (Indian Navy) தாக்குதல் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படைக்காக வாங்கப்படும் இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்த மதிப்பு சுமார் 4 2.4 பில்லியனாக இருக்கும்.
சிறார் ஆரோக்கியம்: இந்தியா 77வது இடம்
- ஐ.நா. உலக சுகாதார அமைப்பின் சிறார் ஆரோக்கிய வல்லுனர்கள் குழு 180 நாடுகளில் சிறார் நிலை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
- ஸ்திரக் குறியீட்டிற்கு 2030ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக கரியமில வாயு வெளியிடும் நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நாடுகளில் தனி நபரின் சராசரி கரியமில வாயு வெளியீட்டால் சிறார் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் ஆய்வு செய்யப்பட்டது.
- அதில் ஸ்திரமான நிலைப்பாடு உள்ள நாடுகளில் இந்தியா 77வது இடத்தை பிடித்துள்ளது.ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வாழ்நாள், சிறார் ஆரோக்கிய சேவைகள், கல்வி, அடிப்படை சுகாதாரம், வறுமையற்ற சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறார் உயிர் பிழைத்து வளரக் கூடிய நாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
- அதன்படி சிறார் நலன் மற்றும் உயிர்வாழ்வு அடிப்படையிலான குறியீட்டில் இந்தியா 131வது இடத்தை பிடித்துள்ளது.உலகளவில் சிறார் நலன் மற்றும் உயிர்வாழ்வு அடிப்படையிலான குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது.
- அடுத்த இரு இடங்களில் தென்கொரியா, நெதர்லாந்து நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இறுதி இடத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசு, சாட் மற்றும் சோமாலியா நாடுகள் உள்ளன.
- தனிநபர் கரியமில வாயு வெளியீடு அடிப்படையிலான ஸ்திரத்தன்மை குறியீட்டில் நார்வே 156வது இடத்தை பிடித்துள்ளது. நெதர்லாந்து, கொரியா ஆகியவை முறையே 160 மற்றும் 166வது இடத்தை பிடித்துள்ளன.
- அதிக கரியமில வாயு வெளியிடும் முதல் பத்து நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா இடம் பெற்று உள்ளன. குறைந்த கரியமில வாயு வெளியிடும் நாடுகளில் புருண்டி, சாட், சோமாலியா முதல் மூன்று இடங்களில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இந்திய வீரர் திவ்யா கக்ரான்
- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் திவ்யா கக்ரான் தங்கம் வென்றார். இந்த போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார். அவர் ஜப்பானிய ஜூனியர் உலக சாம்பியனான நருஹா மாட்சுயுகியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.