தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மோடி
- RSS சித்தாந்தவாதி பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். பிரதம மந்திரி அலுவலக தகவலின் படி, இது நாட்டின் மிக உயரமான தலைவரின் சிலையாக இருக்கும். கடந்த ஒரு வருடத்தில் 200-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் சிலையை முடிக்க அயராது உழைத்துள்ளனர் என்று அறியப்படுகிறது.
- பண்டிட் தீண்டயல் உபாத்யயா நினைவு மையத்தையும் பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணிப்பார். ஒரு வகையான நினைவு மையத்தில் உபாத்யாயாவின் வாழ்க்கை மற்றும் நேரங்களின் செதுக்கல்கள் இருக்கும்.
- IRCTC-யின் 'மஹா கால் எக்ஸ்பிரஸ்' ஐ வீடியோ இணைப்பு மூலம் பிரதமர் கொடியசைத்து துவக்கிவைக்க உள்ளார். IRCTC-யின் 'மஹா கால் எக்ஸ்பிரஸ்' என்பது நாட்டின் முதல் ஒரே இரவில் தனியார் ரயிலாகும், இது உத்தரபிரதேசத்தின் வாரணாசியின் மூன்று ஜோதிர்லிங் யாத்ரீக மையங்களையும், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மற்றும் ஓம்கரேஷ்வரையும் இணைக்கும்.
- இதையடுத்து, பிரதமர் மோடி ஒரு பொது விழாவில் கலந்து கொள்ளவுள்ளார், அங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 430 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை மற்றும் 74 படுக்கைகள் கொண்ட மனநல மருத்துவமனை உள்ளிட்ட 30 திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணிப்பார்.
- உத்தரபிரதேசம் முழுவதிலுமிருந்து தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் பண்டிட் தீண்டயல் உபாத்யய ஹஸ்தகலா சங்கூலில் இரண்டு நாள் 'காஷி ஏக் ரூப் அனெக்' நிகழ்ச்சியை பிரதமர் திறந்து வைப்பார். ஸ்ரீ ஜகத்குரு விஸ்வரத்யா குருகுலின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவிலும் அவர் கலந்து கொள்வார், மேலும் ஸ்ரீ சித்தாந்த ஷிகாமணி கிரந்தத்தின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை 19 மொழிகளில் வெளியிடுவார்.
காலநிலை மாற்றம் கடல் மட்டத்தை உயர்த்தும்: எச்சரிக்கிறது உச்சி மாநாடு
- 'காலநிலை மாற்றத்தால், உலக சராசரி வெப்பநிலை இன்னும் 1.5 டிகிரி செல்சியசிற்கு மேல் சென்றால், கடலடிப் பாறைகள் முற்றிலும் அழிந்து விடும். கடல் நீர் மட்டம் பல மீட்டர்களுக்கு உயரும். ஆஸ்திரேலியா காட்டுத்தீ அதற்கோர் ஆரம்பம்தான்' என, காலநிலை உச்சி மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அன்டார்டிகா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பகுதிகள் காலநிலை மாற்றத்தால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இது, உயிரினங்களின் தாங்குதிறனைத் தாண்டி புவி வெப்பமடைந்து வருகிறது.
- குறிப்பாக, உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும், 1.5 டிகிரி செல்சியசிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவானால், கடலடிப் பாறைகள் முற்றிலும் அழிந்து விடும். அப்படியான நிலை வந்தால், கடல் மட்டம் பல மீட்டர்களுக்கு உயரும்.
- அமேசான், கிரீன்லாந்து போன்ற பூமியின் பெரும்பகுதி கரிமத்தைக் கிரகித்து வைத்துள்ள பகுதிகள் அழிந்து, மில்லியன் கணக்கிலான டன் கரிமத்தை வளிமண்டலத்தில் வெளியிடும்.ஆஸ்திரேலிய காட்டுத்தீ மனித நாகரிகத்தின் முடிவுக்குக் கிடைத்த ஓர் எச்சரிக்கை.
- கொதித்துக்கொண்டிருக்கும் பூமியில் உயிர்த்திருப்பதற்கும் மரணிப்பதற்கும் நடுவிலான இடைவெளியை இந்தக் காட்டுத் தீ சேதங்கள் உரைக்கின்றன. அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உடனடி நடவடிக்கை தேவை.இவ்வாறு அந்த மாநாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் உற்பத்தி நாடுகளில் அமெரிக்காவுக்கு முதலிடம்
- எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை அடைந்துள்ளது. தினந்தோறும் 12 மில்லியன் பேரல் உற்பத்தியால் உலகில் பல்வேறு மாறுதல்கள் நிகழ்கின்றன.
- கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா இந்த வளர்ச்சியை அடைந்துவிட்டது. தினமும் 9 மில்லியன் பேரல் எண்ணெய் அமெரிக்காவில் இருந்து அதன் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு உற்பத்தியின் தேவையே இல்லாத நிலை அமெரிக்காவில் உருவாகியுள்ளது.
- 200க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடன்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதால் அமெரிக்காவின் வளர்ச்சியில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன.
3வது முறையாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு
- டில்லியில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பா.ஜ., ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. டில்லியில், 15 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல், படு தோல்வியை சந்தித்தது.
- இந்நிலையில், டில்லி முதல்வராக, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார். 40 ஆயிரம் பேர் இதற்கான விழா, ராம்லீலா மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. கெஜ்ரிவாலுடன், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆறு அமைச்சர்களும் பதவிஏற்றனர்.
- டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.