இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
- இந்தியாவின், இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தை, ராதாகிஷன் தமானி பிடித்துள்ளார்.'அவென்யூ சூப்பர் மார்க்கெட்' நிறுவனத்தின் நிறுவனரும், 'டிமார்ட்' உரிமையாளருமான, ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு, 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, 'போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் இண்டக்ஸ்' தெரிவித்துள்ளது.
- இதையடுத்து, முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்,
- ராதாகிஷன் தமானி.அவென்யூ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் பங்கு விலை, 2,559 ரூபாயாக கடந்த, 13ம் தேதியன்று அதிகரித்ததை அடுத்து, தமானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது.
- கடந்த, 2002ம் ஆண்டில், மும்பையில் துவங்கப்பட்ட டிமார்ட், தற்போது, 2018ம் ஆண்டு நிறுவன அறிக்கையின்படி, 12 மாநிலங்களில், 176 ஸ்டோர்களுடன் வளர்ச்சியடைந்துள்ளது.கடந்த நிதியாண்டில், அவென்யூ சூப்பர் மார்க்கெட் வருவாய், 19 ஆயிரத்து, 916 கோடி ரூபாய்.
அக்ஷய பாத்ர காலை உணவுத் திட்டம்
- பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வரும் அக்ஷய பாத்ர அறக்கட்டளையின் சார்பில், சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கிடும் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சென்னையில் சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12,000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்ஷய பாத்ர அமைப்பு திட்டமிட்டுள்ளது.
- இந்த மனித நேயப் பணியை செயல்படுத்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது விருப்ப நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.