Type Here to Get Search Results !

15th FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
  • இந்தியாவின், இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தை, ராதாகிஷன் தமானி பிடித்துள்ளார்.'அவென்யூ சூப்பர் மார்க்கெட்' நிறுவனத்தின் நிறுவனரும், 'டிமார்ட்' உரிமையாளருமான, ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு, 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, 'போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் இண்டக்ஸ்' தெரிவித்துள்ளது.
  • இதையடுத்து, முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார், 
  • ராதாகிஷன் தமானி.அவென்யூ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் பங்கு விலை, 2,559 ரூபாயாக கடந்த, 13ம் தேதியன்று அதிகரித்ததை அடுத்து, தமானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது.
  • கடந்த, 2002ம் ஆண்டில், மும்பையில் துவங்கப்பட்ட டிமார்ட், தற்போது, 2018ம் ஆண்டு நிறுவன அறிக்கையின்படி, 12 மாநிலங்களில், 176 ஸ்டோர்களுடன் வளர்ச்சியடைந்துள்ளது.கடந்த நிதியாண்டில், அவென்யூ சூப்பர் மார்க்கெட் வருவாய், 19 ஆயிரத்து, 916 கோடி ரூபாய்.



அக்‍ஷய பாத்ர காலை உணவுத் திட்டம்
  • பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வரும் அக்‍ஷய பாத்ர அறக்கட்டளையின் சார்பில், சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கிடும் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சென்னையில் சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
  • சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12,000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்‍ஷய பாத்ர அமைப்பு திட்டமிட்டுள்ளது.
  • இந்த மனித நேயப் பணியை செயல்படுத்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது விருப்ப நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel