கொரோனா மூலம் பரவும் நோய்க்கு பெயர் கோவிட் - 19 (Covid - 19)
- சீனாவில் கொரோனா வைரசால் பலி எண்ணிக்கை 1016ஐ தொட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசு பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளது.
- மொத்தம் 42638 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 1000 பேருக்கு அதிகமாக இதனால் பலியானது அந்நாட்டை உலுக்கி உள்ளது. நேற்று மட்டும் இதனால் 104 பேர் பலியானார்கள்.
- இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் மூலம் பரவும் நோய்க்கு புதிதாக பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி , கொரோனா மூலம் பரவும் நோய்க்கு Covid-19 என்று அதாவது கோவிட் - 19 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
- கொரோனா வைரஸின் பெயர் மாற்றப்படவில்லை. ஆனால் இதன் மூலம் பரவும் நோய்க்கு மட்டும் கோவிட் - 19 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சார்ஸ் நோய் ஒருவகை கொரோனா வைரஸ் மூலம்தான் பரவியது.
- இதனால் கொரோனா (corona) என்பதில் உள்ள சிஓ (CO) மற்றும் வைரஸ் (Virus) என்பதில் உள்ள விஐ (VI) மற்றும் டிசீஸ் (disease) என்பதில் உள்ள டி (D) ஆகியவற்றை இணைந்து 2019ல் உள்ள 19ஐ இணைத்து கோவிட் -19 (COVID-19) என்ற பெயரை உருவாக்கி இருக்கிறோம்.
- இது உலகம் முழுக்க இனி ஒரே பெயரால் அழைக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. சீனா இதில் மோசமாக திணறி வருகிறது, என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி! 62 இடங்களைப் பிடித்தார் கெஜ்ரிவால்
- டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62ல் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. எட்டு தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெற்றது. கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 'திருப்பதி' கோயில் - 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
- ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசனைப்படி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் ஏழுமலையான் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்தப் பணிகளுக்காக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி பசந்த் குமார், நிர்வாக உறுப்பினர் ஜெ.சேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு எம்.பி வி.விஜய சாய் ரெட்டி தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்காக ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலுக்கு வரும் வட இந்திய பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பணியை மேற்கொள்வதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜம்மு-காட்ரா தேசிய நெடுஞ்சாலையில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.