- இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் சொத்து, 70% ஏழைகள் வைத்திருக்கும் சொத்தை விட 4 மடங்குக்கும் அதிகமானது என்று ஆக்ஸ்பம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யுஇஎப்) 50வது ஆண்டுக் கூட்டம் தொடங்கியது. இதை முன்னிட்டு 'கவனிக்க வேண்டிய நேரம்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை ஆக்ஸ்பம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
- உலகத்தில் உள்ள 2,153 கோடீஸ்வரர்கள், உலக மக்கள் தொகையில் 60 சதவீதமாக இருக்கும் 4.6 பில்லியன்(460 கோடி) மக்களைவிட அதிக சொத்து வைத்துள்ளனர்.
- இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பெரும் பணக்காரர்கள், 70 சதவீத ஏழைகள் (95 கோடி பேர்) வைத்திருக்கும் சொத்தை விட 4 மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர்.
- இந்தியாவில் உள்ள 63 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, இந்தியாவின் 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டான 24 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடியைவிட அதிகமாக உள்ளது.
- பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்தாண்டை விட இந்தாண்டு சற்று குறைந்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆனாலும் பணக்காரர்-ஏழை இடையிலான இடைவெளி மிக அதிகமாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளன.
- இந்த சமநிலையற்ற தன்மை பற்றி விரிவாக ஆலோசிக்காமல், பணக்காரர்-ஏழை இடையிலான இடைவெளியை தீர்க்க முடியாது.
- சாதாரண மக்கள் குறிப்பாக பெண்களின் செலவினங்களில்தான் பெரும் பணக்காரர்கள் அதிகளவில் சொத்துக்களை குவிக்கின்றனர்.
- வருமானம் மற்றும் பாலின சமநிலையற்ற தன்மை குறித்து உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு தொழில்நுட்ப கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஓராண்டு வாங்கும் சம்பளத்தை, வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் சம்பாதிக்க 22 ஆயிரத்து 277 ஆண்டுகள் ஆகும்.
- வீட்டு வேலை செய்யும் பெண் ஒரு ஆண்டில் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக தொழில்நுட்ப கம்பெனியின் சிஇஓ 10 நிமிடத்தில் சம்பாதிக்கிறார். அவரது சம்பளம் வினாடிக்கு 106 ஆக உள்ளது.
- வீட்டில் சமைப்பது, சுத்தப்படுத்துவது, குழந்தைகளை மற்றும் முதியோர்களை கவனிப்பது என இந்தியாவில் உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் பணம் ஏதும் பெறாமல் பணியாற்றுகின்றனர்.
- இதை மதிப்பிட்டால், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு இவர்களது பங்களிப்பு ஆண்டுக்கு ₹19 லட்சம் கோடியாக இருக்கும். இது இந்தியாவின் 2019ம் ஆண்டு கல்வி பட்ஜெட்டான 93 ஆயிரம் கோடியைவிட 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
- உலகளவில் பெண்கள் சம்பளம் பெறாமல் ஒவ்வொரு நாளும் 12.5 பில்லியன் மணி நேரம் பணியாற்றுகின்றனர். உலக பொருளாதாரத்துக்கு இவர்களின் பங்களிப்பு ஒராண்டுக்கு 10.8 டரில்லியன் டாலர்.
- பெரும் பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேரை, தங்கள் சொத்து மதிப்பில் 0.5 சதவீதத்தை கூடுதல் வரியாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு வழங்கினால் அது, 117 மில்லியன் வேலை வாய்ப்புக்கு தேைவயான முதலீட்டுக்கு சமமான தொகையாக இருக்கும்.
ஆக்ஸ்பம் அறிக்கை / OXFAM REPORT
January 21, 2020
0
Tags