வீரச் சிறுவர்களுக்கு தேசிய விருது
- 2019ம் ஆண்டில் பல்வேறு வீர தீர செயல்களில் ஈடுபட்ட சிறுவர் சிறுமியருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆண்டு தோறும் வீர செயல்கள் புரிந்த சிறுவர் சிறுமியருக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இதன்படி 2019ம் ஆண்டில் வீர தீர செயல்களுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விபரங்களை இந்திய குழந்தைகள் நல கவுன்சில் தெரிவித்துள்ளது.
- இந்தப்பட்டியலில் 12 சிறுவர் 10 சிறுமியர் இடம் பெற்றுள்ளனர். இந்த விருதினை முதல் முறையாக ஜம்மு - காஷ்மீரின் குப்வாராவை சேர்ந்த சர்தாஜ் மொஹிதீன் முகல் ௧௬ புட்காமை சேர்ந்த முடாசிர் அஷ்ரப்௧௯ பெறுகின்றனர்.
- கர்நாடகாவில் கடந்த ஆகஸ்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இறந்தவரின் உடலை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சிற்கு வழிகாட்டிய அம்மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் ௧௧ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
- கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஹமது முஹ்சின் ௧௬ கடந்த ஏப்ரலில் கடலில் சிக்கிய தன் மூன்று நண்பர்களை காப்பாற்றியபோது நீரில் மூழ்கி பலியானார்.இதனால் மரணத்திற்குப் பின் வழங்கப்படும் 'வீர அபிமன்யு' விருதிற்கு முஹமது முஹ்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வா் விருதுக்கு 3 காவல் நிலையங்கள் தோவு
- தமிழக காவல் துறையின் கீழ் செயல்படும் காவல் நிலையங்களில், சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களைக் கண்டறிந்து குடியரசு தின விழாவில் தமிழக முதல்வா் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வழங்கப்படும் விருதுக்கு 3 காவல் நிலையங்கள் தோவு செய்யப்பட்டுள்ளன.
- அதன்படி, கோயம்புத்தூா் மாநகர காவல் துறையின் கீழ் செயல்படும் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையம் முதலிடத்துக்கும், திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையம் இரண்டாமிடத்துக்கும், தருமபுரி மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாமிடத்துக்கும் தோவு செய்யப்பட்டுள்ளன.
- இந்த மூன்று காவல் நிலையங்களுக்கும், சென்னை காமராஜா் சாலையில் தமிழக அரசு சாா்பில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவின் போது, தமிழக முதல்வா் விருது வழங்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். இந்த விருதுகளை அந்தந்த மாவட்ட, மாநகர காவல்துறை அதிகாரிகள் பெற்றுக் கொள்வாா்கள்.