Type Here to Get Search Results !

17th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சிஏஏவுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம்
  • பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட 6 மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்காக குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. 
  • இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மத அடிப்படையில் பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் மாநிலமாக, கேரள மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டு நாள் சிறப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் அம்மாநில அமைச்சர் மொஹிந்திரா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
ககன்யான்' திட்டத்துக்கு ரஷ்யாவில் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரோ
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் `ககன்யான்' திட்டத்துக்காக நான்கு விண்வெளி வீரர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து 11 மாதம் பயிற்சியளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். 
  • விண்வெளி வீரர்கள் இந்தப் பயிற்சியை ரஷ்யாவில் பெற உள்ளனர். இந்தப் பயிற்சிக்குப் பிறகு இஸ்ரோ தயாரித்துள்ள Module-ஐ இயக்குவது மற்றும் அதைச் சுற்றி எப்படி வேலை பார்ப்பது உள்ளிட்ட பயிற்சியை விண்வெளி வீரர்கள் பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
  • 10,000 கோடி ரூபாயில் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டமானது 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக `Baahubali GSLV Mark-III' ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த `ககன்யான்' திட்டத்தின் மூலம்தான் மனிதர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புகிறது இந்தியா.
பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்தது ஐ.நா., நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும்
  • இந்தியாவின், நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை, குறைத்து அறிவித்துள்ளது, 
  • இந்தியாவின், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை, 7.6 சதவீதம் என்று முன்பு கணித்திருந்ததிலிருந்து குறைத்து, 5.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்டிருந்த, 7.4 சதவீதத்திலிருந்து, 6.6 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், அடுத்த நிதியாண்டின் ஆரம்பத்தில், வளர்ச்சி விகிதம், 6.3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேக்கமடையும் உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ல், 2.5 சதவீதமாக இருக்கும். 
  • புவிசார் அரசியல் உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலையில் வளர்ச்சி, இந்த ஆண்டில் வெறும், 1.8 சதவீதமாக குறையும். தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை, ஐந்து நாடுகளில் ஒரு நாட்டின் தனிநபர் வருமானம் தேக்கமடையும் அல்லது வீழ்ச்சியடையும்.
  • அதேசமயம், 2020ல், தனிநபர், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், 4 சதவீதத்தை தாண்டக்கூடிய நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, 2019ல் வளர்ச்சி, 2.2 சதவீதத்திலிருந்து, 1.7 சதவீதமாக குறையும்.
  • ஐரோப்பிய ஒன்றியத்தில், தனியார் நுகர்வு வளர்ச்சியால், 2019ல் வளர்ச்சி, 1.4 சதவீதத்திலிருந்து, 1.6 சதவீதமாகஅதிகரிக்க வாய்ப்புள்ளது. சீனாவின் வளர்ச்சி, 2019ல், 6.1 சதவீதமாகவும்; 2020ல், 6 சதவீதமாகவும்; 2021ல், 5.9 சதவீதமாகவும் இருக்கும். 
  • முன்னுரிமை உலகளாவிய பொருளாதார சமநிலை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளிலிருந்து சீனா, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளை நோக்கி நகர்ந்து வருவதால், உலகளாவிய பொருளாதார முடிவெடுக்கும் சக்தியும் இடம் மாறுகிறது. 
  • கொள்கைகளை வகுக்கும் இடத்தில் இருப்பவர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக, சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். 
  • இதற்கு கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களில், முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது 5G ப்ராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைகோள்
  • சீனாவில், தனியார் அமைப்பு தயாரித்துள்ள 5G ப்ராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியூக்வான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, Kuaizhou-1A என்ற ராக்கெட் மூலம், இந்த செயற்கைக் கோளை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. 
  • பெய்ஜிங்கை சேர்ந்த தனியார் அமைப்பு தயாரித்துள்ள, 300 கிலோகிராமுக்கும் குறைவான எடைகொண்ட இந்த சிறிய ரக செயற்கைக் கோள், வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
  • இந்த செயற்கைக் கோள் மூலம், 5G தொழில்நுட்பத்தில், ஒரு வினாடிக்கு 10 ஜிகாபைட் தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel