தமிழகத்திலேயே முதன்முறை - ஊராட்சி தலைவர் பதவியில் பழங்குடி இனத்தவர்
- நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த பொன்தோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொன்தோஸ் நீலகிரி பகுதியில் வசிக்கும் தோடர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்.
- தமிழக அரசியலில் தோடர் பழங்குடி நபர் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
சிறந்த கல்வி நிறுவன பட்டியல் ; சென்னை ஐஐடி முதலிடம்
- இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பட்டியிலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.
- அண்ணா பல்கலை (சென்னை) - 7 வது இடம், பாரதியார் பல்கலை (கோவை) - 14 வது இடம், சென்னை பல்கலை - 20 வது இடம், அழகப்பா பல்கலை (காரைக்குடி) - 28 வது இடம், எஸ்.ஆர்.எம் பல்கலை (சென்னை ) - 32 வது இடம் பிடித்துள்ளன.
5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்
- மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த 150வது துறைமுக ஆண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் மோடி கலந்து கொண்டு பேசினார் .
- நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; 'நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும், கோல்கட்டாவில் உள்ள பெல்டவர் ஹவுஸ், பழைய நாணய கட்டடம், விக்டோரியா நினைவகம் உள்ளிட்ட காட்சியகங்கள் நவீனமாக்கப்படும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
- பெல்டவர் ஹவுசினை உலகின் அருங்காட்சியமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும். பிப்லோபி பாரத் என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.
- அதில் நேதாஜி, சுபாஷ்சந்திரபோஸ் அரவிந்தோ கோஷ் ராஷ் பிஹாரி போஸ் தேஷ்பந்து, பாகா ஜடின், பினாய், பாடல், தினேஷ் போன்ற ஒவ்வொரு சிறந்த சுதந்திர போராளிகளுக்கு அதில் முக்கியத்துவம் வழங்கப்படும்' இவ்வாறு மோடி பேசினார்.
தேஜஸ் வெற்றிகரமாக தரையிறக்கம்
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பல், மிக் 27 ரக போர் விமானங்களை உள்ளடக்கியது.
- இந்த போர்க்கப்பலில், 30 விமானங்களை நிறுத்தலாம்.இந்நிலையில், சமீபத்தில், கடற்படைக்காக தேஜஸ் போர் விமானம் உருவாக்கப்பட்டது. அதை, கடந்த ஆண்டு கோவாவில் உள்ள சோதனை தளத்தில், வெற்றிகரமாக தரையிறக்கி சோதிக்கப்பட்டது.
- தரையிறங்கிய உடனே, விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள, கியர், விமானத்தை தரையில் நகர்ந்து விடாமல், உடனடியாக நிறுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், இந்த புதிய தேஜஸ் போர் விமானம், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பலில், நேற்று வெற்றிகரமாக தரையிறக்கி மீண்டும் மேலே பறந்தது. இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த, டி.ஆர்.டி.ஓ.
ஓமன் சுல்தான் காபூஸ் மரணம்: அரபு பிராந்தியத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்
- அரபு நாடுகளிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவரான ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79வது வயதில் உயிரிழந்துள்ளார்.
- ஓமனின் பிரதமர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகிய உட்சபட்ச பதவிகளையும் இவர் தன் வசமே வைத்திருந்தார்.
- இவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஓமனின் அடுத்த சுல்தானாக இவரது ஒன்று விட்ட சகோதரர் ஹைத்தம் பின் தாரிக் அல் சைத் பதவியேற்றார்.
- சுமார் 50 ஆண்டுகாலம் ஓமன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சுல்தான் காபூஸ். 46 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஓமனில் வசிப்பவர்களில், 43% பேர் வெளிநாட்டவர்கள்.
- தன் 29வது வயதில் பழமைவாத ஆட்சியாளராக இருந்த தனது தந்தை சைத் பின் தைமூரை ஆட்சியில் இருந்து நீக்கி இவர் ஆட்சிக்கு வந்தார்.
- இவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில் வானொலிகளில் பாடல் கேட்பது, கண்களுக்கு சன் கிளாஸ் அணிவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தன.
- யாரெல்லாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும், வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டும் போன்றவற்றைக் கூட முடிவு செய்பவராக சுல்தான் சைத் பின் தைமூர் விளங்கினார்.
- தந்தை தைமூரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியபின், எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நாட்டின் ஆட்சிமுறையையே புதுப்பிக்க போவதாக அறிவித்தார்.
- அந்தக் காலகட்டத்தில் ஓமன் முழுவதும் மூன்றே பள்ளிகளும், 10 கிலோமீட்டர் மட்டுமே சாலை வசதி இருந்தது.
- மார்க்சிய சார்புடைய நாடாக இருந்த ஏமன் மக்கள் ஜனநாயக குடியரசின் ஆதரவைப் பெற்ற தோஃபார் இன மக்களின் ஆயுதப் போராட்டத்தை பிரிட்டிஷ் சிறப்புப் படைகளின் உதவியுடன் ஒடுக்கினார்.
- 'அரபு வசந்தம்' என்று பரவலாக அறியப்பட்ட எழுச்சி, அரபு நாடுகளில் 2011இல் உண்டானபோது ஓமனில் பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கவில்லை.ஓமன் எண்ணெய் வள
- ம் மூலம் காபூஸ் பொருளாதாரத்தை மேம்படுத்தினார்எனினும், ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட முற்பட்டனர்.
- தொடக்கத்தில் அமைதியாக இருந்த பாதுகாப்புப் படைகள், கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு ஆகியவை மூலம் போராட்டத்தை அடக்கியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
- அனுமதியின்றி கூட்டம் கூடியது, சுல்தானை அவமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது.
தேசிய த்ரோபால்: தமிழ்நாடு 3வது இடம்
- மேற்கு வங்க மாநிலம் பர்த்தமானில், அகில இந்திய அளவிலான 42வது சீனியர் த்ரோபால் போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 22 மாநிலங்களை சேர்ந்த அணிகளும், பெண்கள் பிரிவில் 18 மாநிலங்களை சேர்ந்த அணிகளும் பங்கேற்றன.
- தமிழ்நாடு ஆண்கள் அணி லீக் சுற்றில் ராஜஸ் தான், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா ஆகிய அணிகளை 2-0 என நேர் செட்களில் வீழ்த்தியது. தமிழ்நாடு அதன் பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
- காலிறுதியில் கர்நாடகாவை 2-1 என்ற செட்களில் போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் டெல்லி அணியிடம் 0-2 என்ற செட்களில் தோல்வியை தழுவியதை அடுத்து 3, 4வது இடத்துக்கான போட்டியில் தமிழ்நாடு, ஒடிஷா அணிகள் மோதின.
- அதில் தமிழ்நாடு 2-1 என்ற செட்களில் வென்று 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களை தமிழ்நாடு த்ரோபால் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் : பும்ரா சாதனை
- இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது.
- இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை வீரர் குணதிலகாவின் விக்கெட்டை சாய்த்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இது அவரது 53-வது விக்கெட்டாகும்.
- இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார்.
- இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் ஆகியோர் தலா 52 விக்கெட்டுகளுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.
கேலோ இந்தியா தொடரில் முதல் தங்கம் வென்ற திரிபுரா வீராங்கனை
- இந்தியாவின் விளையாட்டுத் திறமையாளர்களைக் கண்டறியும் வகையில் 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' என்ற பெயரில் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தற்போது 3வது சீசன் நடைபெற்று வருகிறது.
- இதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஜிம்னாஸ்டிக் ஆல் ரவுண்ட் பிரிவில் கலந்துகொண்ட திரிபுராவின் பிரியங்கா தாஸ்குப்தா 42.06 புள்ளிகள் பெற்று, இந்த விளையாட்டுத் தொடரின் முதல் தங்கத்தை வென்ற வீராங்கணை என்ற பெயரைப் பெற்றார்.
- ஆண்கள் பிரிவில் முதல் தங்கத்தை வென்றவர் என்ற பெருமை உத்திரப்பிரதேசத்தின் ஜடின் குமாருக்கு கிடைத்தது.
- பெண்களுக்கான 'ரிதமிக்' பிரிவில் மராட்டியத்தின் அன்குஷிற்கு தங்கமும், ஸ்ரேயாவுக்கு வெள்ளியும் கிடைத்தது.