சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்
- கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு "சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை" வழங்கியுள்ளது.
வரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்
- வரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. தொழில் நிறுவங்களின் லாபம் மீதான வரியை 22%-ஆக குறைத்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
- ஏற்கனவே பிறப்பித்த அவசர சட்டத்துக்கு பதிலாக சட்ட முன்மொழிவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
'எய்ட்ஸ்' பாதிப்பு; மிசோராமில் அதிகம்
- வட கிழக்கு மாநிலமான மிசோராமில், 18 ஆயிரம் பேருக்கு, 'எய்ட்ஸ்' நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே, மிசோராமில் தான், எய்ட்ஸ் பாதிப்பு சதவீதம் அதிகம் இருப்பதாக, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 5.1%-ஆக குறைத்தது கிரிசில்
- இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி முன்பு 6.3 சதவீதமாக இருக்கும் என கிரிசில் நிறுவனம் கணித்திருந்தது. இந்த நிலையில், எதிா்பாா்த்ததை விட பல துறைகளின் வளா்ச்சி வேகம் மிக மோசமான நிலையில் உள்ளது.
- இந்த பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என தெரிகிறது. எனவே, நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளதார வளா்ச்சியானது முந்தைய மதிப்பீடான 6.3 சதவீதத்திலிருந்து குறைந்து 5.1 சதவீதமாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், திவால் சட்டம் உள்ளிட்ட சீா்திருத்த நடவடிக்கைகள் எதிா்பாா்த்த வேகத்துக்கு பலனைத் தராததும் பொருளாதார வளா்ச்சி பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று கிரிசில் தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் என ஜப்பானைச் சோந்த நோமுரா நிறுவனம் கணித்திருந்த நிலையில், தற்போது அதனை விட குறைவாக கிரிசில் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி
- இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக சப் - லெப்டினென்ட் ஷிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியக் கடற்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
- இந்த நிலையில் சப் - லெப்டினென்ட் ஷிவாங்கி இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பீஹார் மாநிலம் முசாபராபாதில் பிறந்தவர்.
- கடற்படையில் இணைந்த ஷிவாங்கி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள இந்திய விமானப்படை அகாடமியில் இந்தாண்டு ஜூனில் பயிற்சிக்காக சேர்கப்பட்டார்.
- தற்போது விமானியாக கடற்படையில் இணைந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் இவர் பணியாற்றுவார்.
இ - சிகரெட்' தடை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது
- 'இ - சிகரெட்' எனப்படும், மின் சிகரெட்டை தயாரிக்க, விற்பனை செய்ய, சேகரித்து வைக்க, விளம்பரம் செய்ய தடை விதிக்கும் சட்ட திருத்தத்தை கடந்த செப்டம்பரில், மத்திய அரசு கொண்டு வந்தது.
- இதற்கான மசோதா, லோக்சபாவில், சமீபத்தில் நிறைவேறியது. இந்நிலையில், ராஜ்யசபாவில் இம்மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
ரஷ்யா - சீனா காஸ் இணைப்பு
- ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையே குழாய் மூலம் 'காஸ்' கொண்டு செல்லும் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
- முதல் முறையாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் சீன அதிபர் ஜி ஸின்பிங் துவக்கி வைத்தனர்.