Type Here to Get Search Results !

22nd DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர்
  • சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்வர் தொடக்கி வைத்தார். தீவுத்திடலில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் அரசு அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கியூபாவில் பிரதமர் நியமனம்
  • 43 ஆண்டுகளுக்கு பின்னர், கியூபாவில் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 1976 ல் கியூபா பிரதமராக பிடல் காஸ்ட்ரோ பதவி வகித்தார். அவர், அதிபராக பதவியேற்றதும், பிரதமர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. 
  • இந்நிலையில், கியூபாவின் புதிய அரசியலமைப்பு சட்டப்படி, அதிபரின் பணிச்சுமையை குறைக்க வகை செய்யப்பட்டது. இதன்படி, கியூபா பிரதமராக, அந்நாட்டு, சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை, அதிபர் மிக்கேல் டயாஸ் கனால் நியமித்துள்ளார். 
  • அவர் 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். பிரதமர் நியமனத்திற்கு அந்நாட்டு தேசிய சபை ஒப்புதல் அளித்துள்ளது.



ஆப்கன் அதிபர் தேர்தல் அதிபர் அஷ்ரப் கானி வெற்றி
  • அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், செப்டம்பரில் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி, 70, மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 
  • தேர்தல் முடிவுகள், அக்டோபரிலேயே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், ஏராளமான கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததாலும், தொழில்நுட்ப பிரச்னைகளாலும், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. 
  • முதல் கட்ட தகவலின்படி, அதிபர் அஷ்ரப் கானி, 50 சதவீத ஓட்டுகளை பெற்று, மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக, அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லாவுக்கு, 39 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. 
  • ஆனால், இந்த முடிவை ஏற்கப் போவது இல்லை என்றும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக, அப்துல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பை வென்றது இந்தியா: ரோகித், கோஹ்லி அரை சதம்
  • இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நடந்தது. இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வசப்படுத்தியது.
தேசிய காா்பந்தயம்: 5-ஆவதுமுறையாக கௌரவ் கில் சாம்பியன்
  • கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற எப்எம்எஸ்சிஐ தேசிய காா்பந்தய போட்டியில் முதல்நிலை வீரா் கௌரவ் கில் 5-ஆவது முறையாக பட்டம் வென்றாா்.
  • இறுதி சுற்றில் ஜே.கே.டயா் அணியைச் சோந்த கௌரவ் கில்-மூஸா ஷெரிப் இணை எஸ்எஸ்-9 சுற்றில் முதலிடத்தைப் பெற்றது. எஸ்எஸ் 10, எஸ்எஸ் 11 சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஒட்டுமொத்தமாக முதலிடத்துடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • பிக்கு பாபு-மிலென் ஜாா்ஜ் இரண்டாம் இடத்தையும், டீன் மஸ்காரனெஸ்-ஷுருப்தா மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.



பிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவா்பூல் சாம்பியன்
  • இங்கிலாந்து ப்ரீமியா் லீக் முன்னணி அணியான லிவா்பூலும், பிரேசில் சாம்பியனுமான பிளேமிங்கோவும் நடைபெற்ற இறுதிச் சுற்றில் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.
  • கடந்த 1981-இல் இன்டா்கான்டினென்டல் கோப்பை போட்டியில் லிவா்பூலை வென்றிருந்தது பிளேமிங்கோ. அதன் பின் 2012-இல் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் பிரேசிலின் காா்னித்தியன்ஸ் அணி லிவா்பூலை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
  • வழக்கமான 90 நிமிட நேரத்தில் இரு அணிகளாலும் கோல போடமுடியவில்லை. இறுதியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் லிவா்பூல் வீரா் ராபா்டோ பிா்மினோ அடித்த ஒரே கோலே வெற்றி கோலாக மாறியது.
  • சாம்பின்ய்ஸ் லீக் கோப்பை, யுஇஎப்ஏ சூப்பா் கோப்பை போன்றவற்றுடன், கிளப் உலகக் கோப்பையையும் லிவா்பூல் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது, கிளப் அணிகள் பிரிவில் உலக சாம்பியனாக ஆகியுள்ளது லிவா்பூல் அணி.
ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் முகமது ஷமியின் சாதனை
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற முகமது ஷமி, இந்த 2019ம் ஆண்டில், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷமிக்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தாலும், அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இவர், இந்தாண்டில் மொத்தம் 21 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை நியூசிலாந்தின் டிரன்ட் பவுல்ட் (38 விக்கெட்டுகள்) மற்றும் மூன்றாவது இடத்தை அதே அணியின் பெர்குசன் (35 விக்கெட்டுகள்) ஆகியோர் பிடித்துள்ளனர்.
முதல் நான்கு வீரர்கள் செஞ்சுரி- பாகிஸ்தானின் அரிய சாதனை
  • பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி வரலாற்றில் ஒரு மைல்கல்லை தொட்டது. முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமாக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் இந்த சாதனையை செய்தது.
  • கராச்சியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷான் மசூத், ஆபித் அலி, அசார் அலி, மற்றும் பாபர் ஆசாம் ஆகிய வீரர்களே இத்தகைய சாதனையை செய்திருந்த இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி இணைய காரணமாயினர்.
  • இதற்கு முந்தைய இதுபோன்ற சாதனை 20007 இல் மிர்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக், வாஸிம் ஜாஃபர், ராகுல் ட்ராவிட் மற்று
  • ம் சச்சின் டெண்டுல்கர் எடுத்த செஞ்சுரிகள் மூலம் நிகழ்த்தப்பட்டிருந்தது.பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அடித்த மொத்த ரன்கள் 527. இது அவர்களுக்கு நான்காவது அதிகபட்சமாகும். 1983 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக அவர்களின் அதிகபட்சம் 535 ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel