மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 5 பேருக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது
- மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 5 பேருக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருதுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வழங்கினாா்.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைப்பு: மூடிஸ்
- 2019-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2018-ஆம் ஆண்டு ஜிடிபி வளா்ச்சியான 7.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான அளவாகும். இதற்கு, வேலைவாய்ப்பு வளா்ச்சி விகிதத்தில் காணப்படும் தொய்வு நுகா்வு நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.
- இருப்பினும், பொருளாதார வளா்ச்சியானது 2020-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2021-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், முன்பை விட ஒப்பிடும்போது இதன் வளா்ச்சி வேகம் மிகவும் குறைவான அளவில்தான் காணப்படும்.
- இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது 2018-ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. ஜிடிபியானது 8 சதவீதத்திலிருந்து 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன) 5 சதவீதமாக குறைந்து போனது. இது, ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மேலும் வலுவிழந்து 4.5 சதவீதமாக சரிந்தது என மூடிஸ் தெரிவித்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பிற்கு திஷா சட்டம்; ஆந்திராவில் நிறைவேற்றம்
- ஆந்திர சட்டசபையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் அம்மாநில அரசு 2 புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது குறித்தும் ஆந்திர மாநில சட்டசபையில் 2 புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
- பெண்களுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதையும், குற்றம் செய்த 21 நாட்களுக்குள் இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்துவதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆந்திர மாநில திஷா சட்டம் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களுக்கான ஆந்திர சிறப்பு நீதிமன்றங்கள் 2019, மற்றும் ஆந்திர திஷா சட்டம் - குற்றவியல் சட்டம் (ஆந்திர திருத்தம்) 2019 ஆகிய இரண்டு மசோதாக்களை சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. முன்னதாக இந்த சட்டங்களை மாநில உள்துறை அமைச்சர் சுச்சாரிதா அறிமுகப்படுத்தினார்.
மத்திய நிதி அமைச்சக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
- தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியமர்த்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய அரசின்செலவினங்களை நிர்வகிக்கும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 1987 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சோமநாதன் தற்போது தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறார். முன்னாள் மத்திய நிதி அமைச்சக செயலாளராக இருந்தகிரிஷ் சந்திர முர்மு அக்டோபரில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
- இதேபோல், அமித் கரேவுக்கு பதிலாக ரவி மிட்டல் தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 1986 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரவிமிட்டல், தற்போது நிதிச் சேவைத் துறையின் சிறப்புச் செயலாளராக உள்ளார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளஆர். சுப்ரமணியத்திற்கு பதிலாக, அமித் கரே இப்போது உயர்கல்வித் துறையின் செயலாளராக பணியாற்றுவார்.