மருத்துவ சாதனங்கள் பூங்கா: தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி
- தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம், நான்கு மருத்துவ சாதனங்கள் பூங்காவை அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
- 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும், உலகத் தரத்திலான மருத்துவ வசதி குறைந்த விலையில் கிடைப்பதற்கு உதவும் வகையிலும், இந்த பூங்காக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ஆலைகளை எளிதில் அமைத்து, உற்பத்தியில் ஈடுபடும் வகையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும்.
- இந்த பூங்காக்களில் ஆலைகள் அமைக்கப்படுவதால், இறக்குமதி வரி குறைவதுடன், தரமான மருத்துவ சோதனை வசதிகள் குறைந்த விலையில் கிடைக்கவும் உதவுவதாக இருக்கும்.
- நாட்டில் மருத்துவ சாதனங்களுக்கான சில்லரை சந்தை, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.
- ஆசியாவில், இறக்குமதியில் நான்காவது மிகப்பெரிய சந்தையாக இருந்த போதிலும், உள்நாட்டில் தொழிற்சாலை மிகவும் குறைவாகும்.பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம், இறக்குமதி செய்யும் நிலையில் மாற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதமாக சரிவு
- தயாரிப்புத் துறையின் செயல்பாடு மோசமாக இருந்ததையடுத்து செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதமாக குறைந்தது. இது, கடந்த 2018-செப்டம்பரில் 4.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.
- தயாரிப்புத் துறையின் உற்பத்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் 4.8 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது 3.9 சதவீதமாக சரிந்தது.
- மின்துறை உற்பத்தியும் 8.2 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
- சுரங்கத் துறை கடந்த ஆண்டில் 0.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், நடப்பாண்டில் 8.5 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளதாக புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்பு
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை கொலிஜீயம் பரிந்துரைத்ததன் பேரில் மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரமாணி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அமரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி உத்தரவிட்டார்.
- இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாகவும் சுதந்திர இந்தியாவின் 30-ஆவது தலைமை நீதிபதியாகவும் ஏபி சாஹி பதவியேற்று கொண்டார்.
- இவர் 1985-ஆம் ஆண்டு முதல் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இதையடுத்து 2005-ஆம் ஆண்டு முதல் அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். 2018-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல் பாட்னா தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 1959-ஆம் ஆண்டு பிறந்தார் சாஹி.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்
- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த 5 ஆண்டுகால தடையை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.
- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான 5 ஆண்டுகால தடை மே மாதம் முடிவடைந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
- இத்தடை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபட்தி சங்கீதா திங்ரா செகல் தலைமையில் தீர்ப்பாயத்தையும் ஜூன் மாதம் மத்திய அரசு அமைத்தது. இதனைத் தொடர்ந்து இத்தீர்பாயம் விசாரணை நடத்தியது.
மகளிர் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்று கோப்பையை பெற்றது
- பெர்த் நகரில் இருநாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு இடையே ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் வென்று தலா 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்றது.
- இறுதி போட்டியில் பிரான்சின் கிறிஸ்டினா மளதிநோவிச்சும், கரோலின் கார்சியா ஜோடியும், ஆஸ்திரேலியாவின் ஆஸ் பார்டி, சாம் ஸ்டோசர் ஜோடியும் மோதியது. இதில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் ஜோடி வென்றது.
- இந்த வெற்றியின் மூலம், 3க்கு 2 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் அணி, பெட் கோப்பையை 16 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. மகளிர் போட்டியில் பிரான்ஸ் கைப்பற்றும் 3ஆவது ஃபெட் கோப்பை இதுவாகும்.
வீடியோ கேம் போட்டியில் சீன அணி வெற்றி
- மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லீக் ஆஃப் லெஜன்ட்ஸ் (League of Legends) என்ற விளையாட்டை வடிவமைத்தது. குழுவாக விளையாடும் இந்த கேமை மையமாக வைத்து, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சர்வதேச வீடியோ கேம் போட்டி நடைபெற்றது.
- இறுதிப் போட்டியில், சீனா மற்றும் ஐரோப்பிய அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், சீன வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றனர்.
- வெற்றி பெற்ற சீன வீரர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்தப்போட்டியை 15 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.