கீழடியில் தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் புதன்கிழமை ஒரே குழியில் அருகருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டன.
மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சல் தலை: ரஷ்யா கவுரவம்
- அக்.,2 ம் தேதி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் "மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ரூ.2,780 கோடியில் புதிய தொழில் முதலீடுகள்: முதல்வர் முன்னிலையில் அமெரிக்காவில் ஒப்பந்தங்கள்
- தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க நியூயார்க்கில் 'யாதும் ஊரே' என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார்.
- இதைத் தொடர்ந்து JEAN MARTIN, JOGO HEALTH, ASPIRE CONSULTING உள்ளிட்ட 16 நிறுவனங்கள் தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்நிறுவனங்களின் முதலீட்டால் தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதுதவிர HALDIA PETROCHEMICALS என்ற அமெரிக்க நிறுவனம் தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க கொள்கை அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சென்னை - ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து; 20 அணு உலை அமைக்க மோடி - புடின் ஒப்பந்தம்
- ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுடன், ராணுவம், வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில், 15 ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.
- சென்னைக்கும், ரஷ்யாவின் விளாதிவோஸ்டாக் நகருக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து துவங்கவும், நமது நாட்டில், அடுத்த, 20 ஆண்டுகளில், மேலும், 20 அணு உலைகள் அமைப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக, ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவின் கிழக்கு பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை, மோடி பெற்றுள்ளார்.
- விளாதிவோஸ்டாக்கில் நடந்த, இந்தியா - ரஷ்யா இடையேயான, 20வது ஆண்டு மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
- 'நாஜிக்களுக்கு எதிராக நடந்த, 'கிரேட் பேட்ரியாடிக்' போர் வெற்றியின், 75வது ஆண்டு விழாவை, அடுத்த ஆண்டு, மே மாதத்தில் கொண்டாட உள்ளோம்; அதில் பங்கேற்க வேண்டும்' என, மோடிக்கு, புடின் அழைப்பு விடுத்தார்.
தேசிய நல்லாசிரியராக சசிகுமார் தேர்வு
- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சசிகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விசா இல்லாத புனிதப் பயணம் - இந்தியா, பாகிஸ்தான் இடையே புரிந்துணர்வு
- சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள கர்தார்பூர் காரிடாருக்கு விசா இல்லாமல் சீக்கிய யாத்ரிகர்கள் சென்றுவரும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
- இருதரப்பிலும் நிகழும் சில குறிப்பிட்ட வேறுபாடுகளின் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பாகிஸ்தான் தரப்பில் யாத்ரிகர்களை உள்ளே அனுமதிப்பதற்கு சேவை கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.
- ஆனால், பாகிஸ்தானின் இந்த நிபந்தனையானது, யாத்ரிகர்களின் இலகுவான மற்றும் எளிதான அணுகலுக்கு இடையூறாக இருக்கும் என்று இந்தியா கூறப்படுகிறது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி 5% உயர்வு
- மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி 5% உயர்த்தப்பட்டுள்ளது.
- 180 நாட்களுக்கு சுங்கவரி உயர்த்தி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மசோதாவை திரும்ப பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவிப்பு
- குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதாவை திரும்பப் பெறுவதாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கின் பெண் தலைமை செயல் அதிகாரி கேரி லேம் அறிவித்துள்ளார்.
பாக்., பயிற்சியாளர் மிஸ்பா
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதனையடுத்து புதிய பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்போட்டி: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்
- உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்போட்டி பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வந்தது.
- இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் நடந்த கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர்- சவுரப் சவுத்ரி ஜோடி சக நாட்டவர்களான யாஷ்அஸ்வினி சிங் – அபிஷேக் வர்மா இணையை 17-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
- தோல்வி அடைந்த யாஷ்அஸ்வினி- அபிஷேக் வர்மா ஜோடி வெள்ளிப்பதக்கம் பெற்றது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று 9 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து வியக்க வைத்துள்ளது.
- மற்ற நாடுகள் ஒரு தங்கப்பதக்கத்துக்கு மேல் வெல்லவில்லை. சீனா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது.