- 'வி.ஏ.ஓ., உட்பட, 6,491 பணியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வில், இரண்டு கேள்விகள், தவறாக கேட்கப்பட்டுள்ளது என, தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 4 தேர்வு, நேற்று, 3,000 மையங்களில் நடந்தது. இதில் பங்கேற்க, 16 லட்சத்து, 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
- இதில், 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கேள்விகளுக்கு, தலா, ஒன்றரை மதிப்பெண் என, 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் என, இருமொழிகளிலும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
- ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு விடைகள் தரப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்யும்படி அமைந்திருந்தது.
- நேற்றைய தேர்வில், 141வது கேள்வியாக, 'பொருத்துக' என்று கேட்கப்பட்டு, இருபுறமும், தலா, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன.இதில், ஒரு பக்கம், குடியரசு தினம் என, குறிப்பு தரப்பட்டிருந்தது.
- எதிர்பக்கம், ஜன., 26, 1950 என்கிற தேதியே தரப்படவில்லை. இதனால் தேர்வர்கள், குழப்பம் அடைந்தனர்.அதே போல், 158வது கேள்வியில், இந்திய அரசியலமைப்பின் எந்த விதி, அடிப்படை கடமைகள் குறித்து விளக்குகிறது என, கேட்கப்பட்டு, நான்கு பதில்கள் தரப்பட்டிருந்தன.
- இதற்கு, '51 - ஏ' என்பது, சரியான விடை.ஆனால், இந்த கேள்வி, ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில், அடிப்படை கடமை என்பதற்கு பதில், அடிப்படை உரிமைகள் என, கேட்கப்பட்டுள்ளது.
- ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட அடிப்படை உரிமைக்கு, முதல், மூன்று பதில்களும் சரியானவை. எனவே, ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
'குரூப் - 4' தேர்வில் தவறான கேள்விகள் / WRONG QUESTION ON GROUP 4 & VAO EXAM 2019
September 03, 2019
0
Tags