சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்
- பருவமழை பொய்த்தாலும் சென்னை நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க பேரூரில் ரூ.6,078 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
- அதுபோல, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் என பல்வேறு சிறந்த திட்டங்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இந்தத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- 2011 முதல் 2019 வரை 11 லட்சத்து 46,000 பெண்களுக்கு 5,525 கிலோ தங்கம், ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என ரூ.3,955கோடி வழங்கப்பட்டுள்ளது.
- அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 3 லட்சத்து 33,000 மகளிர் பதிவு செய்துள்ளனர். 2017 - 2018 ஆம் ஆண்டில் 1லட்சத்து 40,000 மகளிருக்கு மானியமாக ரூ.338 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2019 இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி பேச்சு
- 2019 இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- மாநிலம் முழுவதும் 4.60 லட்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்று வரும் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் பேசினார்.
பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி
- பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது இந்தியாவின் பங்கஜ் அத்வானி முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் மியான்மரின் மண்டலே நகரில் நடைபெற்ற போட்டியில் மியான்மர் வீரர் நே துவே உ-வை வீழ்த்தி பட்டம் வென்றார்.
தென் மண்டல தடகளத்தில் ராமநாதபுரம் மாணவி தங்கம்
- கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்து வரும் தென் மண்டல தடகளப்போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மாணவி வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துஉள்ளார்.
- தென் மண்டல அளவிலான தடகள போட்டிகள் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா,மாலத்தீவு, கர்நாடகாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி பிளஸ்1 மாணவி எம்.ஐஸ்வர்யா 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் 35:50 மீ., வீசி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
- ஈட்டி எறிதல் போட்டியில் 30:38 மீ., எறிந்து மூன்றாம் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சவுரப் வர்மா
- வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். வியட்நாமின் ஹோசிமின் சிட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீரர் சன் பெய் சியாங்கை சவுரப் வர்மா வீழ்த்தினார்.