கீழடியில் கிடைத்த சுடுமண் சிற்பம்
- கீழடியில் நடக்கும் அகழாய்வில், சுடு மண் சிற்பங்களை கண்டறிந்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், கீழடியில், தொல்லியல் துறையினர், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தி வருகின்றனர்.
- அதில், 2,000 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம், சுடுமண்சிற்பங்களை கண்டெடுத்தனர்.
- தற்போது, மனித முகம், கால்நடை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், பெண்கள் காதில் அணியும் நட்சத்திர வடிவ சுடுமண் காதணி, சங்கு வளையல்கள், அணிகலன்களை கண்டறிந்துள்ளனர்.
- மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பம், புத்தர் முக வடிவில் அமைத்துள்ளனர். சுடுமண் காதணியின் வட்ட பகுதியில், தாமரை மொட்டு போல, ஆறு இடங்களில் வரைந்துள்ளனர்.
- தொடர்ந்து, இப்பகுதியில் பண்டை காலத்தில், பெண்கள் பயன்படுத்திய அழகு சாதன பொருட்கள் கிடைத்து வருவதாக, தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கிய பஹ்ரைன் அரசு
- பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், பஹ்ரைன், ஐக்கிய அமீரகம், ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு சென்றார்.
- அங்கு அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனை பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு மோடி சென்றார். இந்த நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வது இதுவே முதல்முறையாகும்.
- அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு பஹ்ரைன் இளவரசர் கலிபா இன் சல்மான் அல் கலிபா சிறப்பான வரவேற்பு அளித்தார். இருவருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. அதில் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். அப்போது பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார்.
- பின்னர் இந்தியாவுக்கும் - பஹ்ரைனுக்கும் இடையே வலுவான நட்புறவு ஏற்படவே பிரதமர் மோடிக்கு பஹ்ரைன் நாட்டின் மிக உயரிய விருதான அரசர் ஹமாத்தின் பேரிலான மறுமலர்ச்சி விருது வழங்கப்பட்டது. மேலும் பஹ்ரைன் சிறையில் உள்ள 250 கைதிகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என பிரதமர் அலுவகமும் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டில் விபத்துக்களால் IAF 26 போர் விமானங்களை இழந்துள்ளது
- இந்திய விமானப்படையின் (IAF) போர் கப்பலில் எண்ணிக்கையை குறைப்பது கவலைக்குரியதாக இருந்தால், கொள்முதல் பற்றாக்குறை மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் தாமதம் ஆகியவை ஒரே காரணங்கள் அல்ல. இந்தியா தொடர்ந்து விபத்துக்களில் விமானங்களை இழந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட 26 போர் விமானங்களை இழந்துள்ளது.
- இது குறித்து பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 போர் விமானங்களும், 12 விமானிகள் மற்றும் ஏழு குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், விமானம் விபத்துக்களால் ஆறு விமானங்களை இந்தியா இழந்துள்ளது. பிப்ரவரியில் ஒரு ஜாகுவார் விமானத்தை இழந்தது, இரண்டு - ஒரு ஹாக் Mk 132 மற்றும் MiG 27 UPG-யை பிப்ரவரியில் இழந்தன. மார்ச் மாதத்தில், IAF மீண்டும் இரண்டு விமானங்களை விபத்துக்குள்ளாக்கியது - MiG 21 பைசன் மற்றும் MiG 27 UPG. ஜூன் மாதத்தில் AN-32 விமானத்தை இழந்தது.
- ஆகஸ்டில், அசாமில் ஒரு பயிற்சிப் போட்டியின் போது ஒரு சுகோய்-30 விமானத்தை இழந்தது. இந்த எண்ணிக்கையில் ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் புட்காமில் Mi-17 ஹெலிகாப்டர் விபத்து இடம்பெறவில்லை, பாலகோட் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தோ-பாக் பதற்றத்தின் உச்சத்தில், ஒரு குடிமகனைத் தவிர 6 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், F&F அடையாளம் காணப்பட்ட தவறான வழக்கில் Mi-17 ஹெலிகாப்டர் இந்திய ஏவுகணையால் தாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
- இந்த விபத்துக்கு தளத்தின் தலைமை இயக்க அதிகாரி உட்பட 5 IAF அதிகாரிகள் குற்றவாளிகளாக உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளின் IAF செயலிழப்பு அறிக்கை அட்டை 2014 முதல் 2019 வரை 13 போராளிகளை இழந்துள்ளதாக காட்டுகிறது. இரண்டு ஆண்டுகள் - 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆறு விமான விபத்துக்கள் நடந்துள்ளது.
- 2019 வரை இந்த விபத்துக்களில் ஒரு டஜன் விமானிகள் கொல்லப்பட்டாலும், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. இந்த விபத்துக்களில் மொத்த உயிர் இழப்பு 46 ஆகும். ஏனெனில், ஏழு விமானப் பணியாளர்கள் மற்றும் 27 சேவைப் பணியாளர்களும் விபத்தில் இறந்தனர்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில், ஹெலிகாப்டர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் போக்குவரத்து சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சேர்க்கப்பட்டால், இழப்புகள் 37 ஆக உயரும். எண்களின் முறிவு ஆறு ஹெலிகாப்டர்கள், ஒன்பது பயிற்சியாளர்கள் மற்றும் மூன்று போக்குவரத்து விமானங்களை விபத்துக்களில் இழந்தன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த பிரதமர் மோடி
- ஜி-7 உச்சி மாநாட்டிற்காக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இதே போல் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குத்தேரஸையும் பிரதமர் மோடி சந்தித்தார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் மோடி சந்தித்து பேசினார்.
- ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், பிரிட்டன் பிரதமர் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளரை பிரதமர் மோடி சந்தித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா
- ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
- ரஹானே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
- முன்னதாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
- டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது.
பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை
- ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து.
- இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து.
- 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
- அதே போன்று, கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற சிந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல்முறை.
- 2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றார் பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தங்கம் வெல்ல உதவினார்.
இந்திய வீரர் சாய் பிரனீத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம்
- உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி பேசில் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா உடன் மோதினார்.
- இப்போட்டி ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடிய ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா முதல் செட்டில் 21 -13 என்ற கணக்கில் வென்றா.ர் பின்னர் இரண்டாவது செட்டில் 21 -8 என்ற கணக்கில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தினார்.
- கடந்த 1983-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரகாஷ் படுகோன் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். அதன் பின்னர் 36 வருடங்கள் கழித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கம் பெற்றுள்ளார்.
- இதன் மூலம் இந்திய வீரர் சாய் பிரனீத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.
உலக வில்வித்தை: கோமலிகா 'தங்கம்'
- உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் 'ரிகர்வ் கேடட்' பிரிவில் இந்திய வீராங்கனை கோமலிகா பாரி தங்கம் வென்றார்.ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.
- இதன்மூலம் இவர், 'ரிகர்வ் கேடட்' பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்திய வீராங்கனையானார். இதற்கு முன், 2009ல் இந்தியாவின் தீபிகா குமாரி, இப்பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
- தவிர இது, உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 4வது தங்கம். ஏற்கனவே பால்டன் ஹான்ஸ்டா (பெண்கள் காம்பவுண்டு ஜூனியர், 2006), தீபிகா குமாரி ('ரிகர்வ் கேடட்', 2009 மற்றும் 'ரிகர்வ்' ஜூனியர், 2011), தங்கம் வென்றிருந்தனர்.
- மூன்று பதக்கம்: இம்முறை இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெண்கலம் என, மொத்தம் 3 பதக்கம் கிடைத்தது.
- ஏற்கனவே காம்பவுண்டு ஜூனியர் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சுக்பீர் சிங், ரஜினீ மார்கோ ஜோடி தங்கம் வென்றிருந்தது. தவிர, காம்பவுண்டு ஜூனியர் ஆண்கள் அணிகள் பிரிவில் சுக்பீர் சிங், சங்கம்பிரீத் சிங் பிஸ்லா, துஷார் சஞ்சய் ஆகியோர் அடங்கிய இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்தது.
2019 சூப்பர் ஒகினாவா கராத்தே போட்டி: சென்னை வீராங்கனை மஹிதாவுக்கு 2 தங்கம்
- உலக கோஷிகி கராத்தே சம்மேளனத்தின் ஆதரவோடு ஒகினாவா நகரில் நடைபெற்ற 2019 சூப்பர் கராத்தே போட்டியில் பங்கேற்ற மஹிதா சுரேஷ், அதில் மிக அபாரமாக செயல்பட்டு கட்டா(செய்முறை பயிற்சி) குமிதே (சண்டை பயிற்சி) ஆகிய இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்றார்.
தொடரும் கோலியின் சாதனை பட்டியல்! கங்குலியின் சாதனையை முறியடித்து முதலிடம்
- இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இருந்து வரும் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறார்.
- இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இநித்யா அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
- இந்த போட்டியில் வென்றதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் தோணியுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.
- 60 போட்டிகளுக்கு தலைமையேற்று 27 வெற்றிகளை குவித்த தோணியுடன் 47 போட்டிகளில் மட்டுமே தலைமையேற்று அந்த இடத்தை பிடித்துள்ளார் கோலி.
- மேலும் வெளிநாடுகளில் அதிக போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கோலி. இதற்கு முன்னதாக வெளிநாடுகளில் 28 போட்டிகளில் தலைமையேற்று கங்குலி 11 வெற்றிகளை பெற்றுள்ளார்.
- தற்போது 26 போட்டிகளுக்கு தலையேற்றுள்ள கோலி இதுவரை 12 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார்.