எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு புதிய தலைவராக சுனில் நியமனம்
- மத்திய அரசின் பெருந்துறைமுகங்களில் ஒன்றான எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த எம்.ஏ. பாஸ்கராச்சார் கடந்த ஜூலை 31, 2017-இல் பணி ஓய்வு பெற்றார்.
- இதனையடுத்து இத்துறைமுகத்தின் தலைவர் பொறுப்பை பாரதீப் துறைமுகத் தலைவர் ரிங்கேஷ் ராய் கூடுதலாக கவனித்து வந்தார்.
- பின்னர் சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் வசம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு கூடுதலாக காமராஜர் துறைமுகத்தையும் நிர்வகித்து வருகிறார்.
- இந்நிலையில் தற்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக சுனில் பாலிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் பாக் சீனா முயற்சி தோல்வி
- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, சர்வதேச விவகாரமாக்க முயன்ற, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்தது.
- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, சமீபத்தில், ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 'காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும்' என, அமெரிக்கா, சீனா மற்றும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உட்பட, பல நாடுகளிடம், பாகிஸ்தான் கெஞ்சியது.
- ஆனால், 'இது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; அதில், தலையிட மாட்டோம்' என, அமெரிக்கா உட்பட, பல நாடுகள் தெரிவித்தன. இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும், இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறது.
- இது, பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்சியாக அமைந்தது. இதையடுத்து, காஷ்மீர் பற்றி விவாதிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்ட வேண்டும் என, கூறியது. இது தொடர்பாக, கவுன்சிலின் தற்போதைய தலைமை நாடான, போலந்து நாட்டின் துாதர், ஜோனா வெரோனெக்காவுக்கு கடிதம் எழுதியது.
- அந்தக் கடிதம், பாதுகாப்பு கவுன்சிலின், ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகள் மற்றும் 10 தற்காலிக உறுப்பினர் நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.நிரந்தர உறுப்பினர் நாடுகளில், சீனாவை தவிர மற்ற நாடுகள், இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தேர்வு
- இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு வெள்ளிக்கிழமை மாலை இதனை அறிவித்துள்ளது.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது
- இந்திய மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா நாட்டின் உயர்ந்தபட்ச விளையாட்டு விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- விளையாட்டுத் துறையில் சிறப்பாக சேவை புரிந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு அர்ஜுன விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மிகச் சிறந்த வீரருக்கு உயர்ந்தபட்ச விருதாக ராஜீவ் கேல் ரத்னா விருது தரப்படுகிறது. இதில் ஒரு விருது, ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கும்.
- ஆசிய போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற வீரரான பஜ்ரங் புனியா கடந்த 2018-ஆம் ஆண்டே ராஜீவ் கேல் ரத்னா விருது கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது பெயர் தேர்வு செய்யப்படாத நிலையில் நீதிமன்றத்துக்கு செல்வேன் என எச்சரித்தார்.
- இந்நிலையில் நிகழாண்டும் இந்த விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தம் தலைமையில் கால்பந்து முன்னாள் நட்சத்திரம் பாய்சுங் புட்டியா, குத்துச்சண்டை உலக சாம்பியன் மேரி கோம் உள்பட 12 உறுப்பினர்கள் குழு வெள்ளிக்கிழமை பஜ்ரங் புனியா பெயரை தேர்வு செய்தது.