Type Here to Get Search Results !

24th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஆதார் கட்டாயம்: திருத்த மசோதா தாக்கல்
  • மத்திய அரசு கொண்டு வந்தது. ஆதார் எண் கட்டாயம் அவசர சட்டம் காலாவதியானதால், வங்கி கணக்கு மற்றும், சிம் கார்டுகளை பெற, ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வகை செய்யும், ஆதார் திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • பார்லி. லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இம்மசோதாவை இன்று தாக்கல் செய்தார் இது தொடர்பாக அவர் கூறியது, நாட்டில் 60 கோடி பேர் ஆதார் எண்ணை கொடுத்து சிம்கார்டு பெற்றுள்ளனர் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி மேல் வங்கி கணக்குகளை தொடங்கவும் , சிம்கார்டுகளை பெறவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வகை செய்யவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.



சிலிர்க்க வைத்த கார்கில் போர் காட்சி
  • ஜம்மு - காஷ்மீர்மாநிலம், லடாக் பிராந்தியத்தில் உள்ள கார்கிலில், 1999ல் நடந்த போரின், 20வது ஆண்டையொட்டி, மத்திய பிரதேச மாநிலம்குவாலியரில் உள்ளவிமானப்படை தளத்தில், மீண்டும் அந்த போர்க் காட்சிகளை, விமானப்படை நடத்தி காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது.ஜம்மு - காஷ்மீர்மாநிலம் லடாக் பிராந்தியத்தில், டிராஸ் அருகே உள்ளது கார்கில்.
  • இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே, நம் எல்லைக்குள் உள்ள இந்தப் பகுதியை, பாகிஸ்தான் ராணுவம், 1999ல் ஆக்கிரமிக்க முயற்சி செய்தது.மிகவும் உயரமான, 'டைகர்' மலைப் பகுதியில் நுழைந்த பாக்., ராணுவத்துடன், நம் ராணுவம் போரில் ஈடுபட்டது.
  • கடந்த, 1999ல், மே, 3 முதல், ஜூலை, 26 வரை, இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த இந்தப் போரில், நம் படைகள் வெற்றி பெற்றன. சிறப்பு நிகழ்ச்சி இந்தப் போரின்வெற்றியை, 'விஜய் திவஸ்' எனப்படும், வெற்றிதினமாக, ஒவ்வொரு ஆண்டும், நம் படைகள் கொண்டாடி வருகின்றன.தற்போது, கார்கில் போர் வெற்றியின், 20வது ஆண்டை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • கார்கில் போரின் போது நடந்ததை விளக்கும் வகையில், ஒரு நிகழ்ச்சிநடத்தப்பட்டது.இதற்காக, விமானப்படை தளத்தில், ஒரு செயற்கை டைகர் மலை உருவாக்கப்பட்டது. போர் விமானங்கள் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட, ஐந்து மிராஜ்-2000; இரண்டு, மிக் - 21எஸ்; ஒரு, சுகோய் - 30 போன்ற போர்விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
ஆன் லைனில் மின்கட்டணம் செலுத்தும் முறையில் பஞ்சாப் முதலிடம்
  • மத்திய மின்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களை அர்பன் ஜோதி அபியான் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 7 மாதங்களில் ஆன்லைன் முறையில் அதிகமானவர்கள் மின் கட்டணம் செலுத்திய மாநிலங்களில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி பஞ்சாப் மின்துறைக்கு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் எண்ணிக்கை 21.99 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 7 மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40.92 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • கடந்த மே மாதத்தில், பஞ்சாப் மின்துறை வசூலித்த ரூ.438 கோடி மின் கட்டணத்தில் 7 லட்சம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டதாகும். அதே சமயம் இந்த ஆண்டு மே மாதம், வசூலிக்கப்பட்ட ரூ.1200 கோடி மின் கட்டணத்தில் 95 லட்சம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டுள்ளது.
  • 2008 ம் ஆண்டு பஞ்சாப் மின்துறையால் துவக்கப்பட்ட இந்த இ-கட்டணம் செலுத்தும் முறை, தற்போதே வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை 1 ம் தேதி முதல் ரூ.50,000 க்கும் அதிகமான மின் கட்டணங்கள் டிஜிட்டல் முறையில் மட்டுமே வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்ட கர்நாடகா அவசரமாக கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
  • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசுக்க கர்நாடகா கடிதம் எழுதியுள்ள இந்த பரபரப்பான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது.
  • காவிரியின் குறுக்கே தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைபடம் மற்றும் பட்ஜெட் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கர்நாடகா கடிதம் எழுதியுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்கள் அணை கட்ட தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என கர்நாடகா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
  • தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை 1.72 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது. 
  • கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின்போது, பிறப்பித்த உத்தரவையும் கர்நாடகா இதுவரை பின்பற்றவில்லை என்பதால் இந்த கூட்டத்தில் தமிழகம் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தும் என தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு கத்தார் ரூ.21 ஆயிரம் கோடி நிதியுதவி
  • கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதை தொடர்ந்து தங்களுக்கு உதவும்படி பாக். பல்வேறு நாடுகளை கேட்டுக் கொண்டது. சீனா, யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகியவை உதவுவதாக அறிவித்துள்ளன.
  • இந்நிலையில் மத்திய கிழக்கு நாடான கத்தார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உதவி புரிவதாக அறிவித்துள்ளது. இவை பாக். ரிசர்வ் வங்கியில் முதலீடாகவோ அல்லது கடனாகவோ வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel