- நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
- வருகிற 20-ந்தேதியும், 21ஆம் தேதியும் தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெறவிருந்த எழுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்துத் தேர்வு, மே.11ஆம் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும் என்றும், வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்துத் தேர்வு, உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு ஆகியவை மே.5ஆம் தேதி (காலை மற்றும் மதியம்) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
- கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வும் ஏற்கனவே அறிவித்தபடி மே.11 மற்றும் 12ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC EXAM 2019 POSTPONED / டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு
April 08, 2019
0
Tags