நோக்கம்
- பிளாஸ்டிக் இல்லா தமிழ் நாட்டினை உருவாக்குவது மற்றும் சிறந்த தரமான வாழ்க்கையை நமக்கு நாமே உறுதி செய்வதுமே நமது நோக்கமாகும்.
குறிக்கோள்
- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அதனை முழுமையாக தடை செய்வதுமே நமது குறிக்கோளாகும்.
- இதற்காக அனைத்து பங்குதாரர்களும் அதாவது உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் மற்றும் பொதுநல சமூக அமைப்புகள் அனைவரும் அரசுடன் ஒருங்கிணைந்து ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க உண்மையாக செயல்படுவதுமே ஆகும்.
பிளாஸ்டிக் மறுசுழற்சி
- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- ஆகவே அவைகளை முறையாக சேகரித்து, மறுசுழற்சி மூலம் விஞ்ஞான ரீதியில் மறுஉபயோகத்திற்கு பயன்படுத்தப்படவேண்டும்.
- பொதுவாக இளகும் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மைக்கேற்ப, பாலிஎத்திலின், பாலிபுரோப்பிலின், பாலிஸ்டிரின்,.
- மற்றும் பாலிவினைல் குளோரைடு போன்றவைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- இவற்றின் இளகும் தன்மைக்கேற்ப, மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, பல பயனுள்ள வீட்டுஉபயோக பொருட்கள் தயாரிக்கப்பயன்படுத்தப்படுகின்றன.
- தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் சாலைகள் அமைப்பதற்கு பிளாஸ்டிக் குப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இறுகும் வகையான பிளாஸ்டிக் குப்பைகளின் எரிதிறன் தன்மையால் மின் உற்பத்தி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் இணை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
- தற்பொழுது நடைமுறையிலுள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சியினை திறம்படுத்தி செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு சமன்படுத்தப்பட்டு மத்திய அரசின் "தூய்மை இந்தியா" என்ற குறிக்கோளை அடைய முடியும்.
பிளாஸ்டிக் குப்பைகளின் பயன்பாட்டை குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அவைகளில் சில பின்வருமாறு.
- பிளாஸ்டிக் குப்பைகளினால் ஏற்படும் மாசு குறித்து, சுற்றுச்சூழல் அரங்கத்திலிருந்து கிண்டி சிறுவர் பூங்கா வரை மாணவப்பேரணியை 05.06.2018 அன்று மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் துவங்கி வைத்தார்..
மற்ற மாவட்ட அலுவலகங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
திண்டுக்கல் மாவட்டம்
- டட்லி பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் கைப்பைகளை உபயோகப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.
- நுகர்வோர் உற்பத்தி நிலையம், திண்டுக்கல் மற்றும் சுற்று சூழல் சங்கம், திண்டுக்கல் மூலமாக 1000 துணி கைப்பைகள் அச்சிடப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
- பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கிடையே ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
- பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த 200 சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டன.
விருதுநகர் மாவட்டம்
- விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் 05.06.2018 அன்று பிளாஸ்டிக் கைப்பைகள் உபயோகப்படுத்த மாட்டோம் என விருதுநகர் பேருந்து நிலையத்தின் முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர்
- 06.06.2018 அன்று அரசினர் மேல்நிலைப் பள்ளி, வீரர்பட்டி, விருதுநகர் மாவட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் கைப்பைகள் உபயோகப்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து நடத்தினர்.
- அரசினர் மேல்நிலைப் பள்ளி, வீரர்பட்டி, விருதுநகர் மாவட்ட மாணவர்களால் வீரர்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கழிவு மேலாண்மை
- 2016 ஆம் ஆண்டில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், திட கழிவு மேலாண்மை விதிகள், 2016 மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஆகியவற்றை அறிவிப்பு செய்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016
- திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, விதி 15-ன் படி திடக்கழிவுகளை சேகரித்தல், வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லுதல், செயல்முறைக்குள்ளாக்குதல், மறுசுழற்சி செய்தல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் வெளியேற்றுதல் ஆகிய பொறுப்புகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்தது.
- திடக்கழிவுக்களை கையாளுவதற்கு கட்டணமும் மற்றும் உடனடி அபராதமும் விதிபதற்கான துணைச் சட்டங்கள் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளாளும் உருவாக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு, திடக்கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு 25.01.2017 தேதியிட்ட அரசாணை எண். 5 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA.IV) துறை வாயிலாக மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016
- பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 விதி 6 மற்றும் 7-ன் படி பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுத்தல், சேகரித்தல், சேமித்தல், வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லுதல், செயல்முறைக்குள்ளாக்குதல் மற்றும் வெளியேற்றுதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக உள்கட்ட அமைப்பை உருவாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. .
- தமிழ்நாடு அரசு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட செயல்படுத்தும்பொருட்டு 23.10.2016 தேதியிட்ட அரசாணை எண். 148 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA.IV) துறை வாயிலாக மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது