இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவர் நியமனம்
- லோக்பால் தேர்வுக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் அவர்களும் மற்றும் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக நீதிபதிகள் திலிப் பி.போசலே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தினேஷ் குமார் ஜெயின், ஐ.பி.எஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் இந்தர்ஜித் பிரசாத் கௌதம் ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு மக்களவை தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
- நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவுக்கு சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- 'இந்திய தேர்தல் ஆணையம் முன்னாள் அரசு அதிகாரிகளான திரு சைலேந்திர ஹண்டா மற்றும் திருமதி மது மகாஜன் ஆகியோரை சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமித்துள்ளது.
- சைலேந்திர ஹண்டே மகாராஷ்டிரா மாநிலத்திலும் மது மகாஜன் தமிழகத்திலும் தேர்தல் செலவினங்களை கவனிப்பார்கள்.
மரபுக்கு மாறாக சிறுவனுக்கு வீர தீர செயல் விருது
- முப்படைகள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்களுக்கு, வீர தீர செயலுக்கான விருதுகளை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.
- தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை அடித்து விரட்டிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் வீர தீர விருது வழங்கப்பட்டது.
- ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 'ஆர்மர்டு கார்ப்ஸ்' பிரிவின் வீரர் விஜய் குமார், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கான்ஸ்டபிள், பிரதீப் குமார் பாண்டா உயிரிழந்தனர். இந்த இருவருக்கும், கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
- மணிப்பூரில் நடந்த நடவடிக்கையில் உயிரிழந்த, ராணுவத்தின் ரைபிள்பேன் ஜெயபிரகாஷ் ஓரான், ஜம்மு - காஷ்மீரில் உயிர் இழந்த ராணுவ வீரர் அஜய் குமாருக்கு, மூன்றாவது உயரிய விருதான, சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை: குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு
- அகில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் விதிமுறைப்படி, வரும் கல்வி ஆண்டில் (2019-2020) பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றியமைக்கப்படுகிறது.
- அதில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண் 35 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும், இதரப் பிரிவினர் அனைவருக்கும் 40 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆப்கனுக்கு முதல் வெற்றி: டெஸ்ட் அரங்கில் வரலாறு
- ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டேராடூனில் நடந்தது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து 172, ஆப்கானிஸ்தான் 314 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அயர்லாந்து அணி 288 ரன்கள் எடுத்தது.
- இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இசானுல்லா (65), ஹஷ்மதுல்லா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
- ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அரங்கில் அறிமுகமாகி 277 நாட்களே ஆன நிலையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதுவரை விளையாடிய 2 டெஸ்டில், ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் அறிமுகமான ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
"பாதுகாப்பு வீரர் படங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தகூடாது" - தேர்தல் ஆணையம்
- பாதுகாப்புத்துறை பற்றி பிரச்சாரங்களில் பயன்படுத்தக்கூடாது என அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- அதில் பாதுகாப்புத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையை சார்ந்தவர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக்கூடாது என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தங்களது கட்சி வேட்பாளர்களிடமும் அதனை அறிவுறுத்தும்படியும் தேர்தல் ஆணையம் அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.