- ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இலவச உடை, உணவு, தங்கும் வசதி மற்றும் மருத்துவ பாதுகாப்பு வழங்குவதன் மூலம் கல்வியினை வழங்குதல்.
வழங்கப்படும் உதவிகள்
- உணவு, தங்கும் இடவசதி, கல்வி, சீருடைகள், இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், மருத்துவ வசதிகள், காலணிகள் மற்றும் படுக்கைகள் ஆகியன.
தகுதியுடைய பயனாளிகள்
- ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள் அல்லாத (அ) ஒற்றை பெற்றோரை கொண்ட / நலிவுற்ற பெற்றோர்கள் மற்றும் கைதிகளின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள்.
வருமான வரம்பு
- ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
- 5-லிருந்து 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் வளாகத்தின் பள்ளியினுள் பயில அனுமதிக்கப்படுவர் மற்றும் ஆண் குழந்தைகள் வளாகத்தினுள் 5-ஆம் வகுப்பு வரை பயில அனுமதிக்கப்படுவர்.
- தந்தை மற்றும் தாயை இழந்த பெண் குழந்தைகள் அவர்களின் உயர் கல்விக்காக 21 வயது வரை அனுமதிக்கப்படுவர்.
கல்வித் தகுதி
- கல்வித் தகுதி என்று எதுவும் தேவை இல்லை.