Type Here to Get Search Results !

குடிமராமத்துத் திட்டம்


  • இத்திட்டம் உள்ளூர் விவசாயிகளின் உதவியுடன் அணைகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • 2018 ஆம் ஆண்டு ஜூலை 04 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி இத்திட்டத்தைக் கண்காணிப்பதற்கு 7 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
  • தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 2017 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் கிராமத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
  • இது கால்வாய்கள், தொட்டிகள், அடைப்புக் கதவுகள் ஆகியவற்றைப் பராமரித்தல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 
  • இத்திட்டத்தின் முதல் நிலையில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்தின்படி, பயனாளிகள் அல்லது விவசாயிகள் தமது பங்காக 10 சதவிகித நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 
  • இந்த பங்களிப்பானது நிதி, உழைப்பு அல்லது பொருள் என எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். 
  • மேலும் இத்திட்டமானது உலக வங்கியிடமிருந்தும் நிதியுதவியைப் பெறுகிறது. 
  • நீர் நிலைகளில் உள்ள களைகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலைகளை வலுப்பெறச் செய்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel