ஆசியாவில் மிகப்பெரிய ஆற்றல் சேமிப்பு மையம் : டெஸ்லா அமைக்கிறது
- ஜப்பானின் ஒசாகா ரயில் நிலையத்தில் 42 மின்சேமிப்பான்களை டெஸ்லா நிறுவியுள்ளது. இதன் மூலம் ரயில்களுக்கும், அதன் பயணிகளுக்கும் தேவையான மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்.
- எப்படிப்பட்ட மின் தடை ஏற்பட்டாலும் ஓசாகாவில் நிறுவப்பட்டுள்ள இந்த மின்சேமிப்பான்கள் உடனடியாக தன்னிடம் இருந்து மின்சாரத்தைக்கொடுத்து ரயிலை அடுத்த நிறுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்றும் டெஸ்லா டுவிட்டரில்தெரிவித்துள்ளது.
- 7 மெகாவாட்-ஹவர்ஸ் மின்சேமிப்பை மையம், ஆசியாவில் 4வது மிகப்பெரிய மின்சேமிப்பு மையமாக விளங்கும்.
- இதை மின்சேமிப்பு மையத்தினை ஜப்பானின் கின்டென்சூ ரயில் நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது.
த.மா.காவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு
- 17 வது மக்களவைப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது.
- இந்நிலையில் தமிழ்நாட்டில் மெகா கூட்டணியான அதிமுகவில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறிவிட்டது.
- இந்நிலையில் இன்று தஞ்சை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்
பிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி
- பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய மூன்றாவது வாக்களிப்பும் தோல்வியில் முடிந்துள்ளது.
- ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இருந்த நாளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
- பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன் மொழிந்த ஒப்பந்தத்துக்கு 344 பேர் எதிராகவும், 286 பேர் மறுத்தும் வாக்களித்தனர்.
- இதன்மூலம் மே 22 அன்று ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் வாய்ப்பை பிரிட்டன் இழந்துள்ளது.
வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றமில்லை; காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு
- 'அடுத்த நிதியாண்டிற்கான, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றம் ஏதும் இல்லை' என, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
- இவ்வாணையம், ஒவ்வொரு நிதியாண்டிற்கும், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தை நிர்ணயிக்கிறது.
வேட்புமனுக்களில் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திடுவதற்கு தடை இல்லை: தில்லி உயர்நீதிமன்றம்
- அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் வேட்பு மனு ஏ, பி படிவங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஏப்ரல் - ஜூன் காலாண்டு சிறுசேமிப்பு வட்டியில் மாற்றம் கிடையாது
- பிபிஎப், தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), கிசான் விகாஸ் பத்திரம் (கேவிபி) உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் காலாண்டுக்க ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
- அந்த வகையில், வரும் நிதியாண்டு முதல் காலாண்டுக்கான ஏப்ரல் - ஜூன் மாத வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட்டி விகிதம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.
- இதன்படி, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பிபிஎப், தேசிய சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டு வட்டி 8 சதவீதமாக இருக்கும். கிசான் விகாஸ் பத்திரங்களுக்கு வட்டி 7.7 சதவீதம். 112 மாதங்களில் இந்த பத்திரம் முதிர்வடையும்.
- இதுபோல், 5 ஆண்டுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8.7 சதவீதம், செல்வமகள் சேமிப்பு திட்ட வட்டி 8.5 சதவீதம், 1 முதல் 5 ஆண்டு டெர்ம் டெபாசிட்களுக்கு 7.7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி, 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்களுக்கு 7.3 சதவீத வட்டி வழங்கப்படும்.