Type Here to Get Search Results !

29th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஆசியாவில் மிகப்பெரிய ஆற்றல் சேமிப்பு மையம் : டெஸ்லா அமைக்கிறது
  • ஜப்பானின் ஒசாகா ரயில் நிலையத்தில் 42 மின்சேமிப்பான்களை டெஸ்லா நிறுவியுள்ளது. இதன் மூலம் ரயில்களுக்கும், அதன் பயணிகளுக்கும் தேவையான மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்.
  • எப்படிப்பட்ட மின் தடை ஏற்பட்டாலும் ஓசாகாவில் நிறுவப்பட்டுள்ள இந்த மின்சேமிப்பான்கள் உடனடியாக தன்னிடம் இருந்து மின்சாரத்தைக்கொடுத்து ரயிலை அடுத்த நிறுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்றும் டெஸ்லா டுவிட்டரில்தெரிவித்துள்ளது.
  • 7 மெகாவாட்-ஹவர்ஸ் மின்சேமிப்பை மையம், ஆசியாவில் 4வது மிகப்பெரிய மின்சேமிப்பு மையமாக விளங்கும்.
  • இதை மின்சேமிப்பு மையத்தினை ஜப்பானின் கின்டென்சூ ரயில் நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது.
த.மா.காவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு
  • 17 வது மக்களவைப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது. 
  • இந்நிலையில் தமிழ்நாட்டில் மெகா கூட்டணியான அதிமுகவில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறிவிட்டது. 
  • இந்நிலையில் இன்று தஞ்சை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்
பிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி
  • பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய மூன்றாவது வாக்களிப்பும் தோல்வியில் முடிந்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இருந்த நாளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
  • பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன் மொழிந்த ஒப்பந்தத்துக்கு 344 பேர் எதிராகவும், 286 பேர் மறுத்தும் வாக்களித்தனர்.
  • இதன்மூலம் மே 22 அன்று ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் வாய்ப்பை பிரிட்டன் இழந்துள்ளது.



வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றமில்லை; காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு
  • 'அடுத்த நிதியாண்டிற்கான, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றம் ஏதும் இல்லை' என, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
  • இவ்வாணையம், ஒவ்வொரு நிதியாண்டிற்கும், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தை நிர்ணயிக்கிறது.
வேட்புமனுக்களில் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திடுவதற்கு தடை இல்லை: தில்லி உயர்நீதிமன்றம்
  • அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் வேட்பு மனு ஏ, பி படிவங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஏப்ரல் - ஜூன் காலாண்டு சிறுசேமிப்பு வட்டியில் மாற்றம் கிடையாது
  • பிபிஎப், தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), கிசான் விகாஸ் பத்திரம் (கேவிபி) உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் காலாண்டுக்க ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 
  • அந்த வகையில், வரும் நிதியாண்டு முதல் காலாண்டுக்கான ஏப்ரல் - ஜூன் மாத வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட்டி விகிதம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. 
  • இதன்படி, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பிபிஎப், தேசிய சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டு வட்டி 8 சதவீதமாக இருக்கும். கிசான் விகாஸ் பத்திரங்களுக்கு வட்டி 7.7 சதவீதம். 112 மாதங்களில் இந்த பத்திரம் முதிர்வடையும். 
  • இதுபோல், 5 ஆண்டுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8.7 சதவீதம், செல்வமகள் சேமிப்பு திட்ட வட்டி 8.5 சதவீதம், 1 முதல் 5 ஆண்டு டெர்ம் டெபாசிட்களுக்கு 7.7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி, 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்களுக்கு 7.3 சதவீத வட்டி வழங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel