நோக்கம்
- தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும்.
- பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்க
- அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்க
- அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்க
- உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்க
- பயனாளிகள், நியாய விலைக் கடைகளை எளிதாக அணுக
- ஏழை மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் வழங்க
- ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில், அத்தியாவசியமான பொருட்களை வழங்க
பொது விநியோக திட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைகள்
- தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்திற்குறிய கொள்கைகளை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வகுத்திருக்கிறது.
- இந்த கொள்கைகள், மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தலைமையின் கீழ் மற்றும் அரசு செயலாளர் தலைமையின் கீழ் உள்ளது.
- உணவு வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (CS&CPD)
தமிழ் நாடு உணவு வழங்குதல் கழகம் (TNCSC)
- பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள அத்தியாவசியமான பொருட்களை கொள்முதல், பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்புக்களை பெற்றுள்ளது. இக்கழகம் நிர்வாக இயக்குனர் தலைமையின் கீழ் செயல்படுகிறது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவகம் (RCS)
- எல்லா மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நியாய விலைக் கடைகளை நடத்த பொறுப்பை பெற்றுள்ளது.
- இச்சங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுப் பதிவாளரின் துணையுடன் உள்ள பதிவாளரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது.
இந்திய உணவு கழகம்
- இது ஒரு இந்திய அரசாங்கத்தின் அமைப்பு. இந்த அமைப்பு அரிசி, கோதுமை மற்றும் மற்ற அத்தியாவசியமான பொருட்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள உணவு ஒதுக்கீடு அமைச்சரகத்தின் ஆணைகள் படி மாநிலங்களுக்கு பரிமாற்றம் செய்கிறது.
நியாய விலைக் கடைகள்
- நிர்ணயிக்கப்பட்ட அட்டை எண்ணிக்கையை விட குறைந்த அளவு அட்டைகள் நியாய விலைக் கடையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் அந்த கடைகளை பகுதி நேர கடைகளாக மாற்ற கோரிக்கை செய்யப்பட்டால், குறிப்பிட்ட காரணங்கள் (தொலைப் பகுதி, மலைப் பகுதி, நிலப்பகுதி – சட்டம் ஒழுங்கு பிரச்சினை) இருந்தால், அந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- வாடகையற்ற இடம் வழங்குதல் மற்றும் ஏதாவது நிதி பொறுப்பை கிராம மக்கள் அரசுக்காக ஏற்றுக்கொண்டால், பகுதி நேர கடைகளை அரசு திறக்க அனுமதி வழங்கும். ஓவ்வொரு நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அட்டை எண்ணிக்கையை குறைத்து, பயனாளிகளுக்கு சிறந்த சேவையை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைகள்
- தமிழ்நாட்டில், குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான குடும்ப அட்டை வகைகளை தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். குடும்ப அட்டை வகைகள், வருமானம் அடிப்படையில் வழங்கப்படாது.
- ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்படும்.
- அந்யோதையா அண்ணா யோஜனா திட்டத்தில் இருந்து, தகுதியற்ற குடும்பங்களை அகற்ற குறிப்பிட்ட காலத்தில் குடும்பங்கள் மாவட்ட ஆட்சியர்களால் ஆய்வு செய்யப்படும். தகுதியற்ற குடும்பங்கள் கண்டறியப்பட்டால், அந்த குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை அகற்றப்பட்டு, புதிய தகுதி உள்ள குடும்பங்களுக்கு அந்த முத்திரை வழங்கப்படும்.
- இந்திய உச்ச நீதி மன்றத்ததால், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மிகவும் ஏழ்மையான மாவட்டங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், அதிகபடியான ஏழ்மையான பயனாளிகள் உள்ளனர்.
தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்
- தமிழ் நாடு அனைவருக்குமான பொது விநியோகத் திட்ட செயல்முறையைப் பின்பற்றுகிறது. அதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேல் என்ற பாகுபாடு இல்லை.
- இருப்பினும் இம்மாநிலம் அந்தயோதயா அண்ணா யோஜனாவை (AAY) செயல்படுத்துகிறது மற்றும் தற்போது 18,63,185 அந்தயோதயா அண்ணா யோஜனா பயனாளர்கள் உள்ளனர். பிழை இல்லாக் கணக்கெடுப்பு முறை இல்லாததாலும் தற்போதைய குறியீட்டு முறையும் குறைபாட்டுடன் இருப்பதாலும் வறுமையை ஒழிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.