இந்தியக் கடற்படையின் அடுத்த தளபதியாக கரம்பிர் சிங் நியமனம்
- துணை அட்மிரல் கரம்பிர் சிங் இந்தியக் கடற்படையின் அடுத்த தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்தியக் கடற்படையின் தளபதியாக சுனில் லன்பா பதவி வகித்து வருகிறார். அவரது பதவி காலம் வருகிற மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அட்மிரல் சுலின் லன்பாவுக்குப் பிறகு, கரம்பிர் சிங் நியமனம் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- துணை அட்மிரல் கரம்பிர் சிங், தற்போது கடற்படையின் துணைத் தளபதியாக செயல்பட்டு வருகிறார். இவர் இந்தியாவின் மிக பெரிய மற்றும் முதல் கப்பற்படை தளம் எனப் பெயர் பெற்ற விசாகப்பட்டினத்திலுள்ள கிழக்கு கடற்படையின் தலைவராக இருந்து வருகிறார்.
- இந்தியக் கடலோர காவல்படைக்கு சொந்தமான சாந்த்பிபி, ஏவுகணை தாங்கி கப்பலான விஜய்துர்க் ஆகியவற்றின் தளபதியாகவும் இருந்துள்ளார். அதிசிறந்த சேவைக்கான பதக்கத்தை குடியரசுத்தலைவரிடம் இருந்து இவர் பெற்றுள்ளார்.
5ஜி தொலைபேசி சேவையை 2020-ம் ஆண்டில் தொடங்க நடவடிக்கை: பரீட்சார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர் தகவல்
- 5 ஜி தொழில்நுட்ப சேவையை 2020-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் தொடங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக ஸ்பெக்ட்ரம் பரீசார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர் தெரிவித்துள்ளார்.
- கடந்த பிப்ரவரி 25-ம் தேதி எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்துக்கான உரிமம், அளவு, கட்டணம் மற்றும் பரீட்சார்த்த சேவை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவோம்.
உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்
- மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் பினின் பரீனா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் உலகின் சக்திவாய்ந்த ஹைப்பர் காரை வெளியிட்டு இருக்கிறது. இத்தாலியை சேர்ந்த பினின் பரீனா நிறுவனம் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
- மஹிந்திரா - பினின் பரீனா கூட்டணி. ஆம். உலகின் அதிசக்திவாய்ந்த முதல் மின்சார ஹைப்பர் கார் மாடலை பினின் பரீனா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ''பேட்டிஸ்டா'' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மின்சார கார், ஜெனிவா மோட்டார் ஷோ மூலமாக பொதுப்பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது.
- இந்த காரில் T வடிவிலான 120 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது மின்சார கார் என்பதால், சைலென்சர் சப்தத்திற்கு வேலை இல்லை. புகாட்டி சிரோன் ஹைப்பர் காரைவிட இது மிக சக்திவாய்ந்த மாடல். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2 வினாடிகளிலும், 0-300 கிமீ வேகத்தை 12 வினாடிகளிலும் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. இந்த கார், அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தை எட்டும் திறன் வாய்ந்தது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.