தமிழக அரசின் வரி இல்லாத 2019 - 2020 பட்ஜெட்டின் முழுமையான முக்கிய அம்சங்கள்
- தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் ஜனவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.
- தமிழக தனி நபர் வருமானம் 2017-18 ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 267 ரூபாயாக உயர்வு.
- தமிழக பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 51.86% ஆக உள்ளது. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 44,176 கோடியாக இருக்கும்,வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.97 லட்சம் கோடியாக இருக்கும்.
- தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும்.
- கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம் செலுத்த மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.
- வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு
- ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை
- விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்
- விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு
- தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல்
- வரும் நிதி ஆண்டில் அரசின் வருவாய் ரூ.1,97,117 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தியில்
- சம்பளம் கொடுக்கும் வகையில் தமிழக அரசுக்கு சுமார் ரூ.57 ஆயிரத்து 600 கோடி செலவு ஏற்படும்.
- வரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும்.
- வரும் நிதியாண்டில் தமிழக அரசின் செலவு ரூ.2,10,240 கோடியாக இருக்கும்.
- தமிழக அரசுக்கு வரும் நிதியாண்டில் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி பற்றாக்குறையாக இருக்கும்.
- சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு.
- வரும் நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து மானியமாக சுமார் ரூ.22 ஆயிரம் கோடி கிடைக்கும்.
- 2019-19 ஆம் ஆண்டு கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை ரூ.19,319 கோடியாக இருந்தது.
- தனி நபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் ரூ.1,42,267 கோடியாக உயர்ந்துள்ளது.
- மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
- அரசு-தனியார் பங்களிப்பு முறையில், ரூ.2000 கோடி செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
- 2 லட்சம் நான்குசக்கர வாகனங்கள், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள்
- தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அளிக்கும்
- சொற்பமாக உள்ள நில ஆதாரங்களை முறையாகவும், திறம்படவும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மாநில நில பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
- சென்னையில் 2000 கோடி ரூபாய் செலவில் நிலத்தடி வாகன நிறுத்தம் இடம் அமைக்கப்படும்.
- நிலத்தடியில் 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 4 லட்சம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் திட்டத்திற்கு ரூ.2000 கோடி.
- மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும்.
- மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும்.
- கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு.
- ஸ்ரீபெரும்பதூர் அருகே ஒரத்தூரில் அடையாற்றில் நீர்தேக்கம்.
- மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும்.
- முதல்கட்டமாக, கோவை, மதுரை மண்டலங்களுக்கான திட்டங்கள் தீட்டப்படும். இதன் மூலம், பல்வேறு முக்கிய திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்குமான வழிவகை ஒட்டுமொத்த திட்டமிட்ட வளர்ச்சி உறுதிசெய்யப்படும்.
- திருமங்கலத்தை தலையிடமாக கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்.
- சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்க ரூ.3958 கோடி ஒதுக்கீடு
- வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுக் காப்பீடு திட்டம்
- வீட்டுவசதி மற்றும் நகரப்புற மேம்பாட்டுத் துறைக்காக 6,265.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
- விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
- புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு
- காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு
- செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் இதுவரை ரூ.3,074.84 கோடி மதிப்பீட்டில் 1,768 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது
- வரும் நிதியாண்டில் சிவகங்கை கோட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு 622 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.715 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு
- வரும் நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் புதிதாக பயிர்கள் சேர்க்கப்படும்
- இடி மின்னல், திடீர் மழை, இயற்கை தீயால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை
- பயிர் காப்பீடு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.621.59 கோடி ஒதுக்கீடு
- ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளிடம் நிதியுதவி கோருவதற்கான விரிவான திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது. மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும் ரூ.1361 கோடி ஒதுக்கீடு
- வரும் நிதி ஆண்டில் 90 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் கொண்ட 2000 பம்பு செட்டுகள் வழங்கப்படும். சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர் மேலாண்மை மேம்படும்.
- வரும் நிதி ஆண்டில் மேலும் 5000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் அமைக்கப்படும் ரூ.101.62 கோடி ஒதுக்கீடு
- ரூ.100 கோடி செலவில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் உருவாக்கப்படும்.
- உழவர் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்க உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது
- வேளாண் இயந்திரயமமாக்கலுக்காக ரூ.172 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க உத்தேசம்.
- பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
- இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும்
- வேளாண்மை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு
- வேளாண்மைத்துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.10,550 கோடி ஒதுக்கீடு
- வரும் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது
- பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
- மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம்
- ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்க அனுமதி.
- 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.
- உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ.169.81 கோடி நிதி ஒதுக்கீடு.
- பாசன மேலாண்மை நவீனமயமாக்குதலுக்கு ரூ.235.02 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு
- யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
- ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது. பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
- அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 3,000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
- 2000 பிஎஸ்-6 பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்
- வரும் நிதியாண்டில், 1,986 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு.
- பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வரும் நிதியாண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
- அண்ணா பல்கலை.யிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
- அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
- பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு.
- உலக வங்கி கடனுதவியுடன் ரூ.2,685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
- அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள், பொருட்கள் வழங்கப்படும் சிகிச்சை நெறிமுறைகளும் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.247 கோடி ரூபாய் செலவிடப்படும்
- ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-4 தரத்திலான பேருந்துகள், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் திட்டம்
- ரூ.116 கோடி செலவில் நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதி.
- 80 ஆழ்கடல் மீன் பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும்.
- நீர்நிலைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
- அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும். அந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
- அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டிற்கு ரூ.132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம்.
- வரும் நிதி ஆண்டில் சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண் திட்டத்தை ரூ.1546 கோடி ரூபாயில் செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி.
- கொடுங்கையூர் பெருங்குடி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ.5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை.
- நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு.
- 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும் நகர்ப்புர வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்ளை விரைவில் வெளியிடப்படும்.
- நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு
- தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் 250 மெ.வா. திறன்கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின்திட்டங்கள்
- ரூ.2,350 கோடி மதிப்பீட்டில் 500 மெ.வா. திறன்கொண்ட கடலாடி மிகஉய்ய சூரிய மின்னழுத்த பூங்கா திட்டம்
- சாகுபடிக்கு பயன்படாத சமுதாய மற்றும் பட்டா நிலங்களில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்
- பசுமைச் சூழல் நிதி மூலம் 5 மெ.வா திறன்கொண்ட சிறிய அளவிலான ஊரக புதுப்பிக்கத்தக்க மின்பூங்காவுடன் அம்மா பசுமை கிராமம்.
- அம்மா பசுமை கிராமம் என்ற நிலையான மின்கிராமங்களை, தமிழ்நாடு மின் மேம்பாட்டு முகமை ஏற்படுத்தும்
- சூரிய ஒளி மின்சக்தி கொள்கை 2019, மாநிலத்தின் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திறனை 2023-க்குள் 9,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த வழிவகை செய்யும்
- எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு
- மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள்
- மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்
- ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.20,196 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
- மாநில அரசும் ரூ.40,941 கோடி மொத்த மதிப்பீட்டில் திட்டப் பணிகளை மேற்கொள்ள நிருவாக அனுமதி அளித்துள்ளது
- மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயிலின் சேவைப்பகுதி 172.91 கி.மீ ஆக அதிகரிக்கும்.
- பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு
- மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பயனை அமைப்புசாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
- நவீன உயர்நிலை தொழிற்பிரிவுகளுக்கான பயிற்சிகள், 20 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ரூ.38 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
- தமிழகத்தில் முதல் முறையாக 500 மின்சார பேருந்துகளை சென்னை, கோவை, மதுரையில் இயக்க நடவடிக்கை.
- சிறுபான்மையினர் நலத்துறைக்காக ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- நகராட்சிகளில் குடிநீர் தேவைக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு .
- நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.284.70 ஒதுக்கீடு.
- நபார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.811 கோடி நிதி ஒதுக்கீடு.
- மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கு ரூ. 12,563.83 கோடி நிதி ஒதுக்கீடு.
- அரசின் கடன் சுமை ரூ. 42,000 கோடியாக அதிகரிப்பு.
- ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ. 18,273 கோடி ஒதுக்கீடு.
- பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 2,276 கோடி.
- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும்.
- நுண்ணீர் பாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ரூ.1361 கோடி செலவில் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
- பயிர் கடனை உரிய காலத்தில் செலுத்தும் நபருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
- விலையில்லா மாடு, ஆடு வழங்கும் திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். இந்த திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மீன்பிடித் தடைக்கால உதவித்தொகைக்காக ரூ170.13 கோடி.
- 160 ஐசாட் - 2 செயற்கைக்கோள் தொலைபேசிகள், நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கப்படும்.
- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறைக்கு ரூ.12,563.83 கோடி நிதி ஒதுக்கீடு.
- அரசு மருத்துவமனைகளில் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாக கிடைக்க உறுதி செய்ய திட்டம்.
- மீனவர் நலனில் தனி கவனம் செலுத்தி தமிழக அரசு, மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்தப்படும்.
- பாக் விரிகுடா பகுதியில் ரூ.1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மீன்பிடி துறைமுகங்களை கட்ட தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்ப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு.
- காவல்துறையில் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.403.76 கோடி ஒதுக்கீடு.
- போக்குவரத்து துறைக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1297.83 கோடி ஒதுக்கீடு.
- மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ரூ. 1362.27 கோடி ஒதுக்கீடு.
- 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு.
- மாணவர்களுக்கான விலையில்லா புத்தகப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 1656.90 கோடி ஒதுக்கீடு.
- பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 140.11 கோடி ஒதுக்கீடு.
- தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
- கைத்தறி உதவி திட்டத்துக்கு 40 கோடி ஒதுக்கீடு.
- விலையில்லா வேட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு .
- கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ.1170.56 கோடி ஒதுக்கீடு.
- பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக ரூ. 726.32கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு.
- முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி
- சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க ரூ. 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது.
- 2020 மார்ச் 31ல் தமிழக அரசின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும். கடந்த ஆண்டு ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது.
- ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும்.
- 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை, சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
- ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்காக ரூ 40 கோடி ஒதுக்கீடு.
- ஆதி திராவிட மாணவர்களின் உயர்கல்வி உதவி தொகைக்காக 1857.13 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஆதிதிராவிடர் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு.
- பிற்படுத்தப்பட்டோர் நலன் பள்ளிக்கல்விக்காக ரூ. 290.71 கோடி ஒதுக்கீடு
- பிற்படுத்தப்பட்ட விடுதி மாணவர்களுக்காக உணவு செலவுகளுக்காக ரூ. 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- சிறுபான்மையினர் நலனுக்காக ரூ. 14.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகள் மற்றும் 3 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
- தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு.
- காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் ரூ.1560 கோடிமதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது.
- 2019-20இல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு
- 2000 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்படும்.
- 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கான கொள்கைகள் உருவாக்கப்படும்.
- சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும்.
- மரபு திறன் மிக்க கலப்பின காளைகளின் விந்துகளை கொண்டு புதிய உறை விந்து உற்பத்திய நிலையம் அமைக்கப்படும்.
- பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
- மத்திய அரசின் ஒய்வூதிய திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த ரூ 100 கோடி ஒதுக்கீடு.
- போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையம்,வேலை வழங்கும் நிறுவனங்களையும், வேலை தேடுவோரையும் இணைக்கும் மாநில தொழில் மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
- தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு திறனுக்காக 200 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
- ஆண்டுதோறும் 10 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகள் உயர்நிலை சிறப்பு தகுதி தேர்வின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
- மாணவ மாணவிகளுக்கான போக்குவரத்து பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு.
- சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழக்கும் திட்டத்துக்காக ரூ 7.48 கோடி ஒதுக்கீடு.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளம் உருவாக்கப்படும்.
- தமிழ்நாடு இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து விளையாட்டுகள் மேம்படுத்தப்படும்.
- முத்திரைத்தாள் கட்டணங்கள் மூலம் வருவாய் எதிர்பார்ப்பு ரூ 11,512 கோடி.
- சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவு கட்டணம் 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் மாநிலத்துக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
- தமிழக அரசின் மொத்த கடன் இந்த நிதியாண்டில் ரூ 3,97,495.96 கோடியாக இருக்கும்.
- மாநில அரசின் மொத்த கடன் வரம்பு அனுமதிக்கப்பட்ட 25 சதவீதத்திற்கு உள்ளாகவே இருக்கும்.
- மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ 7262.33 கோடி வருவாய் இருக்கும் என எதிர்பார்ப்பு.
- மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்படுகிறது.
பொன்னமராவதி அருகே கண்மாயில் கிடந்த நடுகல் வீரர்கள் சிற்பம் கண்டெடுப்பு
- பொன்னமராவதி அருகே கண்மாயில் இருநடுகல் வீரர்கள் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவில் உள்ள பாறை கற்களில் அகழ்வு முறை வேலைப்பாட்டில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வீரர்களின் தலைமேல் உயரமான உருண்டை கொண்டை அடியில் நாடாக்கட்டுடன் இருக்கிறது. செவ்வக வடிவில் முகம் உள்ளது. வலப்புற தோளுக்கு பின்புலத்தில் அம்பறாத்தூணி (அம்புப்புட்டி) ஒரு பெரிய அம்பு போல் காட்டப்பட்டுள்ளது.
- இந்த சிற்பங்கள் ஆபரணங்கள் அற்ற வெற்று உடலாக தோற்றமளிக்கிறது. இரண்டிலும் இடது கையில் வில் ஏந்தி, வலது கரத்தை இடுப்பு அருகில் கணையை பற்றியுள்ள பாவனையில் வைத்துள்ளனர். ஒரு வீரன் இடப்புறம் நோக்கி நடைபயிலும் நிலையிலும், மற்றொரு வீரன் கால்களை நேராக வைத்து நிற்கும் நிலையிலும் பாறையினுள் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது.
- கிபி 8ம் நூற்றாண்டை சேர்ந்த இவ்விரு வீரர்களும் அந்நாளில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டலில் மாண்டுள்ளனர். ஊருக்காக இன்னுயிர் ஈந்தோர் என்றும் நினைவு கூறும் முகத்தான், கல்லிலே வடிக்க செய்து தம் நன்றி கடனை செலுத்தி உள்ளனர்.
- தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மலைச்சரிவினில் புதைக்கப்பட்டிருந்த 1,500 ஆண்டுகளுக்கும் மேலான சங்ககால முதுமக்கள் தாழிகளும் உடைந்த நிலையில் உள்ளது தெரியவந்துள்ளன.
உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
- தமிழகத்தில் முதல் முறையாக உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் D.M.S வளாகத்தில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பாயம் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி அமைக்கப்பட்டுள்ளது.
- இதில் உணவு பாதுகாப்பு நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் இதன் தலைமை அதிகாரியாக நீதிபதி ஜாகிர் உசேன் பொறுப்பேற்றுள்ளார்.இதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு வழக்குகள் இனிமேல் இந்த தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும்
- நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அதிரடி அரைசதம் விளாசி இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற கேப்டன் ரோஹித் சர்மா, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
- இன்று அவர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இந்த இன்னிங்சின் போது டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக நம்பர் 1 இடத்தில் இருந்த மார்டின் கப்தில் ரன்களை ரோஹித் சர்மா இன்று கடந்து நம்பர் 1 இடத்துக்குச் சென்றுள்ளார்.
அமெரிக்கா: டெக்சாஸ் பயிற்சிக் கழகத் தலைவராக இந்திய-அமெரிக்கர் பொறுப்பேற்பு
- டெக்சாஸ் பயிற்சிக் கழகமானது, சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், சிறந்த தலைவர்களை உருவாக்கி வரும் பொதுநலத் தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்பின் தலைவராகப் பொறியியலாளர் சஞ்சய் ராமபத்ரனை டெக்சாஸ் மாகாண அரசு நியமித்தது.
காவு சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு.ஆந்திர சட்டமன்றம் ஒப்புதல்
- ஆந்திர மாநிலத்தில் காவு சமூகத்தினர் கணிசமான அளவில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
- இந்நிலையில் காவு சமூக மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆந்திர மாநில சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது. மத்திய அரசு பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தியுள்ள நிலையில் ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெலினா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
- பீரங்கி வண்டிகளைத் தகர்க்கக் கூடிய இந்தியாவின் அதி நவீன நாக் ஏவுகணைகளை ராணுவம் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது. அந்த ஏவுகணையை ஹெலிகாப்டரில் இருந்து ஏவும் வகையில் வடிவமைத்து ஹெலினா என்ற பெயரில் புதிய ஏவுகணையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) அறிமுகப்படுத்தியுள்ளது.
- அந்த ஏவுகணை, ஒடிஸா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள சாந்திபூர் சோதனை மையத்தில் வெள்ளிக்கிழமை சோதித்துப் பார்க்கப்பட்டது. ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் இருந்து இலக்கை நோக்கி ஹெலினா ஏவுகணை ஏவப்பட்டது. ஹெலிகாப்டரின் ஏவுமுனையிலிருந்து எந்தச் சிக்கலுமின்றி சீறிப்பாய்ந்த அந்த ஏவுகணை, குறிப்பிட்ட இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்தது.
- 7 முதல் 8 கி.மீ. வரையிலான தொலைவில் உள்ள எதிரிகளின் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கக் கூடிய ஹெலினா, தனது இலக்கை அகச் சிவப்புக் கதிர்களைக் கொண்டு மிகத் துல்லியமாக குறிவைக்கிறது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
லீ நிங் நிறுவனத்துடன் ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார் பி.வி.சிந்து
- சீன நிறுவனமான லீ நிங் குடன் ரூ.50 கோடிக்கு நான்கு ஆண்டுக் கால ஒப்பந்தம் செய்துள்ளார் பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து.
- கடந்த மாதம் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்துடன் ரூ.35 கோடிக்கு நான்கு ஆண்டு கால ஒப்பந்தம் மேற்கொண்டது லீ நிங்.
- இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். ஒப்பந்தக் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். உலக பாட்மிண்டன் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும். நிதியுதவியாக ரூ.40 கோடியை சிந்து பெறுவார்.
- மீதமுள்ள ரூ.10 கோடியின் மூலம் விளையாட்டு உபகரணங்களை அவர் பெறுவார். கடந்த 2017-இல் கிரிக்கெட் வீரர் கோலி, புமா நிறுவனத்துடன் 8 ஆண்டுகளுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு உலகிலேயே அதிகம் வருவாய் ஈட்டிய 7-ஆவது வீராங்கனை சிந்து என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்திருந்தது.