- RGGVY திட்டமானது, நடப்பில் உள்ள அனைத்து திட்டங்களையும் இணைத்து, ஏப்ரல் 2005ல் தொடங்கப்பட்டது.
- இந்த திட்டத்தில், 70% நிதியுதவியை இந்திய அரசும், 10%- ஐ கிராமப்புற மின்மயமாக்கல் கழகமும் (REC), கடனாக மாநில அரசுக்கு அளிக்கும்.
- கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் இந்த திட்டத்தின் முக்கிய நிறுவனம் ஆகும்.
கிராம மின்சாரமயமாக்கம் என்றால் என்ன?
- ஒரு கிராமத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் குக்கிராமங்களிலும், அடிப்படை கட்டமைப்புகளான விநியோக மின் மாற்றி மற்றும் விநியோக மின்சார கம்பி ஆகியன, அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள், சுகாதார மையங்கள், மருந்தகங்கள், சமுதாய மையங்கள் போன்ற பொது இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்
- கிராமத்தின் மொத்த வீடுகளில் 10% வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
RGGVY-ன் நோக்கங்களாவன
- அனைத்து கிராமப்புற இல்லங்களும் மின்சாரத்தை பயன்படுத்துதல்
- வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு, இலவசமாக மின்சாரம் வழங்குதல்
மாநில அரசிடமிருந்து போதுமான மானியம் கிடைக்கப் பெறுதல்
- 11வது 5வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ்வரும் திட்டங்களுக்கு 3 அடுக்கு தர கண்காணிப்பு அமைத்தலை கட்டாயமாக்குதல்
- திட்டத்தின் முன்னேற்றத்தினை வலைத்தளம் மூலம் கண்காணித்தல்.
- முன்திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நிதி வழங்குதல்
- ஒப்பந்தகாரர் வரை நிதியை மின்னணு நிதி மாற்றல் மூலம் அளித்தல்.
- மாநில அரசு மூலம் கிராம மின்சார மயமாக்கும் திட்டங்களை மக்களுக்கு தெரிவித்தல்.
- ஜனத்தொகை 100க்கும் மேல் உள்ள குடியேற்றப்பகுதிகள் இத்திட்டத்தின் கீழ் வரும். 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 49,383 கிராமங்களை மின்சார மயமாக்கவும், 162 லட்ச மின் இணைப்புகளை தருவதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு 327 திட்டங்களுக்கு 16,268 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
- அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு, டெல்லி, கோவா, லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி RGGVY திட்டத்தில் பங்கு பெறவில்லை.