- தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு 5,00,000 (5 இலட்சம்) வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.
வரலாறு
- ஜூலை 23, 2009 அன்று இந்திய மத்திய சுகாதரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கலைஞர் மருத்துவக் காப்பீட்டு (Medical Insurance) திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இதே போன்ற திட்டம் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஆரோக்கியஸ்ரீ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கான தவணைத் (பிரிமியம்) தொகையை பயனாளிகளே கட்ட வேண்டும்.
- ஆனால் தமிழகத்தில் அத்தொகையை மாநில அரசே கட்டியது. இதே போன்று தமிழக மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இதற்கான தவணைத் தொகையாக மாதம் ரூ.20 அவர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எனும் பெயரில் ஸ்டார் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஜூலை 2011ல் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.
பயனாளிகள்
- தமிழ்நாடு அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள்.
- குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 72,000க்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள்
- மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை பெற்று பதிவு செய்து கொள்ளவேண்டியது அவசியம்.
திட்டத்திற்கான மருத்துவமனைகள்
- தற்போது இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அரசின் சார்பாக நடைமுறைப்படுத்தி வருவது இந்திய யுனைடெட் காப்பீட்டு நிறுவனம் ஆகும். தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படும்.