- தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் இலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது.
பயன்பெற தகுதிகள்
- பயனாளி பெண் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
- அக்குடும்பத்தில் உள்ள நபர் எவரும் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கக் கூடாது.
- குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- பயனாளி நிரந்தரமாக அதே இருப்பிடத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- பயனாளியின் வீட்டு சமையல் அறையில் மேடை இருத்தல் வேண்டும். அல்லது மேடை அமைக்க முன் வரவேண்டும்.
- பயனாளி எரிவாயுவினை குறைந்த பட்சம் 3 வருடங்கள் சமையல் செய்யப் பயன்படுத்த வேண்டும்.
- எரிவாயு சிலிண்டர் மட்டும் பயனாளியால் வாங்கப்பட வேண்டும்.